செ.வெ.எண்:344- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2026
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்ப நல செயலகம்த) சார்பில், உலக மக்கள் தொகை தினம் 2026-ஐ முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.07.2026) கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். (PDF 30KB )
