மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2025நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 141KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தெப்பக்காடு யானைகள் முகாமில் மாவூத் கிராமத்தை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025தெப்பக்காடு யானைகள் முகாமில் ரூ.5.06 கோடி செலவில் 44 அரசு குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள மாவூத் கிராமத்தை திறந்து வைத்து, தொரப்பள்ளி முதல் தெப்பக்காடு வரை ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள வான்வழி தொகுப்பு கம்பிகளின் சேவையை தொடங்கி வைத்து, வன சரகர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2.93 கோடி மதிப்பிலான 32 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 126KB)
மேலும் பலசெ.வெ.எண்:236- நீலகிரி மாவட்டத்தில் “கல்லூரி கனவு 2025” நிகழ்ச்சயானது 14.05.2025 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025நீலகிரி மாவட்டத்தில் “கல்லூரி கனவு 2025” நிகழ்ச்சயானது உதகை அரசு பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 14.05.2025 அன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து பல்வேறு துறைகளை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்துள்ள வெற்றியாளர்கள் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்க உரை அளிக்க உள்ளனர்.(PDF 217KB)
மேலும் பலசெ.வெ.எண்:235- நீலகிரி மாவட்டத்தில் 127-வது மலர்க் கண்காட்சியினை முன்னிட்டு 15.05.2025 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 13/05/2025நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 15.05.2025 (வியாழக்கிழமை) அன்று 127-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட 15.05.2025 விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 31.05.2025 (சனிக்கிழமை) அன்று மாவட்டத்திற்கு பணி நாளாக இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா […]
மேலும் பலசெ.வெ.எண்:234- அரசால் தடை செய்யப்பட்ட மையோனைசை பொதுமக்கள் வணிகர்கள் தவிர்க்க வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2025பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தடைசெய்யப்பட்ட பச்சை முட்டையிலிருந்து தயாரித்த மயோனைஸ்சை பயன்படுத்த வேண்டாம். மேலும் உணவு வணிகர்கள் தடை செய்யப்பட்ட மயோனைஸ்சை தயாரிக்கவோ, உணவகங்களில் பரிமாறப்படுவது மற்றும் விற்பனை செய்யவோ கூடாது என்று தமிழ்நாடு உணவு பாதுகாப்பு (ம) நிர்வாகத்துறை நீலகிரி மாவட்டத்தால் அறிவுறுத்தப்படுகிறது.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:233- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறையின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து, நடத்திய புகைப்பட கண்காட்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 29KB)
மேலும் பலசெ.வெ.எண்:232- அரசு தலைமைக் கொறடா அவர்கள் 20-வது உதகை ரோஜா காட்சியை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025நீலகிரி மாவட்டத்தில், 20-வது உதகை ரோஜா காட்சியை அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். (PDF 28KB)
மேலும் பலசெ.வெ.எண்:231- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/05/2025நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீ மதுரை ஊராட்சி, மண்வயல் பகுதியில், சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் சார்பில் ரூ.35.78 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், 09-05-2025 அன்று குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:230- தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு [CPEI] ஜீன் 2025 முதல் தொடங்கவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025தொழில் முனைவோராக வேண்டுமா ? இந்த அரிய வாய்ப்பினை தவற விடாதீர்கள்! தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN), அகமதாபாத் EDII உடன் இணைந்து கடந்த ஆண்டு முதல் தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை [CPEI] நடத்தி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கல்வி பயின்று வருகின்றனர். பாடத்திட்டம் மேம்பாடு மற்றும் நிபுணர்களின் பயிற்சி மூலம் தொழில்முனைவோரை வளர்ப்பதில் EDII அகமதாபாத், தனது […]
மேலும் பலசெ.வெ.எண்:229- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் 127-வது மலர்க்காட்சி முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 09/05/2025நீலகிரி மாவட்டத்தில், சிறப்பு வாய்ந்த 127-வது உதகை மலர்க்காட்சி நடைபெறவுள்ளதை தொடர்ந்து, மலர்க்காட்சி நடைபெறும் உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் முன்னேற்பாடு பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.(PDF 19KB)
மேலும் பல