மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:248 – இந்தியத் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இந்தியத் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டுள்ள பின்வரும் கட்டுப்பாடுகள் நாளை (17.04.2024) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் வரை அமலில் இருக்கும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. (PDF 204KB)

மேலும் பல
P.R.NO. 247 - 0124

செ.வெ.எண்:247 – தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணி

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்குபட்பட்ட 108-உதகமண்டலம், 109-கூடலூர்(தனி) மற்றும் 110- குன்னூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.பிரதாப் கோபேந்திர யாதவ் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:246 – பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை 16.04.2024 முதல் 30.04.2024 வரையுள்ள நாட்களுக்கு தற்காலிக மூடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

தமிழ்நாடு வனத்துறை சார்பில் பைக்காரா வனச்சரகத்திற்குட்பட்ட பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. தற்போது சாலையின் குறுக்கே Culvert கட்டும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் படகு இல்லம் செல்லும் சாலை 16.04.2024 முதல் 30.04.2024 வரையுள்ள நாட்களுக்கு தற்காலிக மூடப்படும் எனவும், மேற்கண்ட நாட்களில் படகு இல்லம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் தற்காலிகமாக தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட வன அலுவலர் (உதகை) அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 28KB)  

மேலும் பல
P.R.NO. 245 - 0124

செ.வெ.எண்:245 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்கு எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 110KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:244 – கேரளா மாநிலத்தில் எதிர்வரும் 26.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி 5 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், ஓட்டல் பார் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

வெளியிடப்பட்ட நாள்: 15/04/2024

கேரளா மாநிலத்தில் எதிர்வரும் 26.04.2024 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், கேரளா மாநில எல்லைப் பகுதியை ஒட்டி 5 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகள் 8215 – தாளுர், 8235 -அய்யங்கொல்லி, 8411 – நம்பியார்குன்னு, 8447 – எருமாடு மற்றும் சமுத்திரா ரீஜென்ஸி எப்.எல்.3 பார் ஹோட்டல் எருமாடு, பந்தலூர் ஆகியவற்றை எதிர்வரும் 24.04.2024 காலை 10.00 மணி முதல் 26.04.2024 நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மதுபானங்கள் விற்பனை […]

மேலும் பல
P.R.NO. 243 - 0124

செ.வெ.எண்:243 – தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை 2024-ஐ முன்னிட்டு, தேர்தல் செலவினங்கள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் திரு.பி.ஆர்.பாலகிருஷ்ணன் இ.வ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 36KB)  

மேலும் பல
P.R.NO. 242 - 0124

செ.வெ.எண்:242 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். (PDF 115KB)

மேலும் பல
P.R.NO. 241 - 0124

செ.வெ.எண்:241 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதை பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 12/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்துவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார். (PDF 106KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:240 – ஆய்வுக்கு வராத வேட்பாளர்களுக்கும் வரவு செலவுக் கணக்கில் வித்தியாசம் உள்ள வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்புக் குறிப்பாணை வழங்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024

இந்தியத்தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் – 2024-ற்கு அறிவிப்பு வெளியான பின்னர் 19 நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களைக் கண்காணிக்கத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு செலவினப் பார்வையாளர்கள் செலவினம் தொடர்பான ரசீதுகள் மற்றும் பதிவேடுகளை 08.04.2024, 12.04.2024 மற்றும் 17.04.2024 ஆகிய நாட்களில் ஆய்வு செய்வதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக 08.04.2024 அன்று செலவினக் கணக்குகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செலவினப் […]

மேலும் பல
P.R.NO. 239 - 0124

செ.வெ.எண்:239 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மலர்த்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்கள் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலர்த்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்கள் முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  (PDF 79KB)

மேலும் பல