செ.வெ.எண்:48- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்ட முதல் கிராம புத்தாக்க குழுவினை (StartupTN) தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழக அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) தனது முக்கியத் திட்டமான “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் கீழ் முதல் கிராம புத்தாக்க குழுவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.01.2026) தொடங்கி வைத்தார்.(PDF 204KB)
மேலும் பலசெ.வெ.எண்:47- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:46- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா, கடநாடு, தூனேரி, கூக்கல், எப்பநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:45- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயிர்சோலை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026நீலகிரி மாவட்டத்தில் உயிர்சோலை திட்டத்தின் கீழ்,வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் “Nilgiris Eco Guardian” பேட்ச் வழங்கினார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:44- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 98 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:43- உதகை ஊராட்சி ஒன்றியத்தில் 12.01.2026 மற்றும் 13.01.2026 ஆகிய இரண்டு நாட்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 13 ஊராட்சிகளில் 12.01.2026 மற்றும் 13.01.2026 ஆகிய இரண்டு நாட்களில்; 188 கிராமங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 578 கிலோ மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரிய முறையில் கழிவு செய்யப்பட்டது.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:42- நீலகிரி மாவட்டம் தங்காடு கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா – 2026
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026நீலகிரி மாவட்டத்தில், உதகை ஊராட்சி ஒன்றியம் பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு கிராமத்தில் நடைபெற்ற 2026 சமத்துவ பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார். (PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:41- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா – 2026
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026நீலகிரி மாவட்டத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற 2026 பொங்கல் விழாவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, கோலப்போட்டிகளில் வெற்றி பெற்ற தோட்டப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, பாராட்டினார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:40- நீலகிரி மாவட்டத்தில் புகையில்லா போகி பண்டிகை – 2026
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புகையில்லா போகி கொண்டாடுவோம்! சுற்றுச்சூழலை பேணிக் காப்போம் !(PDF 261KB)
மேலும் பலசெ.வெ.எண்:39- வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 13/01/2026நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சந்தை பிரிவின் கீழ் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க மேலாளர் பணியிடத்திற்கு கீழ்கண்டவாறு தகுதியுள்ள நபர்களிடமிருந்து உரிய நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதிகள்: பதவியின்பெயர் – மேலாளர், மாவட்டவழங்கல் மற்றும் விற்பனை சங்கம் கல்வித்தகுதி – MBA. (PDF 500KB)
மேலும் பல
