செ.வெ.எண்.236- மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க அரசு பள்ளி மாணவர்களுக்கான குடியிருப்பு கோடை முகாம் நிறைவு விழா
வெளியிடப்பட்ட தேதி : 16/05/2026
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கான, குடியிருப்பு கோடை முகாம் 27.04.2026 முதல் 16.5.2026 அன்று வரை நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (16.05.2026) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.(PDF 192KB )
