மூடு

செ.வெ.எண்:455- மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.09.2026) நேரில் சென்று பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 13/09/2026
14 copy

நீலகிரி மாவட்டம் உதகை எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், நடைபெற்று வரும் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசுச் செயலாளர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் இன்று (13.09.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஆண்களுக்கான கால்பந்து போட்டியினை துவக்கி வைத்தார். (PDF 326KB)

12 copy 13 copy 17 copy 15 copy