செ.வெ.எண்:474- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் ஆகியோர் பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழாவினை துவக்கி வைத்தனர்.
வெளியிடப்பட்ட தேதி : 09/08/2024

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாவட்ட ஊராட்சிகள் (ம) பழங்குடியினர்கள் இணைந்து நடத்திய பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழாவினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் அவர்கள் ஆகியோர் இன்று (09.08.2024) குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். (PDF 64KB)