செ.வெ.எண்:431- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 01/08/2025

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவின் தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை (ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி) அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்காக நான்கு மாதத்திற்குள் ரூ.27.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதி செய்து தரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 59KB)