• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

செ.வெ.எண்:530- நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச, அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற 24.09.2025 (புதன்கிழமை) அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளையும் 24.09.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் மற்றும் கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனர்.(PDF 53KB)