மூடு

செ.வெ.எண்:610- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உதகை ரோஜா பூங்கா வளாகத்தில் கட்டப்பட்ட புதிய மதி அங்காடி மற்றும் விற்பனை மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025
02

நீலகிரி மாவட்டம், உதகை ரோஜா பூங்கா வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், ரூ.10 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மதி அங்காடி மற்றும் விற்பனை மையத்தினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 109KB)

01