செ.வெ.எண்:143- அரசு தலைமை கொறடா அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 06/03/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று ‘உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 61KB)
