செ.வெ.எண்:151- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 22/03/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 36KB)