செ.வெ.எண்:17- தைப்பொங்கல்-2026 திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2026
2026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்:
- 1 கிலோ பச்சரிசி
- 1 கிலோ சர்க்கரை
- ஒரு முழுக்கரும்பு
- வேட்டி சேலை,
- ரொக்கத்தொகை ரூ.3,000/-
வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.(PDF 231KB)