செ.வெ.எண்:22- குடியரசு தின விழாவை முன்னிட்டு உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது
குடியரசு தின விழாவை முன்னிட்டு வருகிற 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை கௌரவிக்கும் பொருட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறும்இ மேலும் நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத முழு மாவட்டமாக மாற்றவும், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கவும், இயற்கை அழகினை பேண எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் (PDF 33KB)