செ.வெ.எண்:25- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 09/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் இன்று (09.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், உங்க கனவ சொல்லுங்க படிவம் மற்றும் கனவு அட்டைகளை தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.(PDF 52KB)
