செ.வெ.எண்:293- அரசு தலைமை கொறடா அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கான மாபெரும் வங்கிக்கடன் உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 11/06/2025

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக்குழுக்கான மாபெரும் வங்கிக்கடன் உதவிகள் வழங்கும் விழாவில் இன்று (11.06.2025) அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, ஊரகப்பகுதிகளில் 190 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 22.70 கோடியும், நகர்புற பகுதிகளில் 188 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.17.13 கோடியும் என மொத்தம் 278 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.39.83 கோடி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கிளைகளின் மூலம் தொழில் தொடங்க வங்கி கடன் உதவிகளை வழங்கினார்.(PDF 42KB)