செ.வெ.எண்:301- கல்லார் சோதனை சாவடியில் பசுமை வரி (Green Tax) வசூல் செய்வது பற்றிய செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட தேதி : 12/06/2025
நீலகிரி மாவட்டத்திற்குண்டான கல்லார் சோதனை சாவடியில் பசுமை வரி (Green Tax) வசூல் செய்வதற்கு 24×7 சுழற்சி முறையில் தற்காலிகமாக பணியாற்ற பதிவு பெற்ற செக்யூரிட்டி ஏஜென்சியிடமிருந்து (முன்னாள் படைவீரர்களால் நடத்தப்பட்டு வரும் ஏஜென்சிக்கு முன்னுரிமை) விலைப்புள்ளிகள் 23.06.2025 அன்று மாலை 05.00க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்(வ), உதகமண்டலம். நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவர்களுக்கான ஊதியம், வசூல் செய்யப்படும் வரியில் சதவீத அடிப்படையில் வழங்கப்படும் (குறைந்த விலைப்புள்ளியின் அடிப்படையில்) என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 33KB)