செ.வெ.எண்:387- மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க 31.07.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 17/07/2025
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதற்காக மாற்றுத்திறனாளிடமிருந்து விண்ணப்பங்கள் 17.07.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற 31.07.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 30KB)