மூடு

செ.வெ.எண்:415- மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில், கட்டப்பட்ட 180 புதிய குடியிருப்புகளை குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
P.R.NO. 415 - 0324

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், புதியதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி, அல்லாஞ்சி பகுதியில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில், கட்டப்பட்ட 180 புதிய குடியிருப்புகளை குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்கள்.  (PDF 37KB)

P.R.NO. 415 - 0124