செ.வெ.எண்:452- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு கருவிகள், உபகரணங்களை நேரில் பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 02/08/2024

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் சார்பில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள பேரிடர் மீட்பு கருவிகள், உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (02.08.2024) நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து, துறைச்சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். (PDF 27KB)