செ.வெ.எண்:465- நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் (15.08.2025) மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட தேதி : 11/08/2025
நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 (FL-1) அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள்(டாஸ்மாக்), எப்.எல்.2 (FL-2) கிளப் பார்கள், எப்.எல்.3 (FL-3) ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ (FL-3A) ஆகியவற்றில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15.08.2025 தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 50KB)