செ.வெ.எண்:480- தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளுக்கான ஆணைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 18/08/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 10 பயனாளிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கினார்.(PDF 49KB)