செ.வெ.எண்:503- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் காந்தள் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட சிறுபான்மை உருது உயர்நிலைப்பள்ளியினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் பகுதியில் தரம் உயர்த்தப்பட்ட சிறுபான்மை உருது உயர்நிலைப்பள்ளியினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 55KB)