செ.வெ.எண்:659- உள்ளாட்சிகள் தினமான 01.11.2025 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்
வெளியிடப்பட்ட தேதி : 28/10/2025
உள்ளாட்சிகள் தினமான 01.11.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 30KB)