செ.வெ.எண்:77- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 13/02/2025

நீலகிரி மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்து, துண்டு பிரசுரங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 40KB)