மூடு

செ.வெ.எண்:791- குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகையினை நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை 31.12.2025-ம் தேதிக்குள் நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். வேலை நாட்களில் தாங்கள் பொருள் பெறும் நியாயவிலை கடைக்கு நேரில் சென்று குடும்பத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களது கைவிரல் ரே-கையினை பதிவுசெய்து கொள்ளலாம். (PDF 430KB)