மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:299- பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று (16.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்திலுள்ள பழங்குடியினர் கிராமங்களில் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மற்றும் முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 107KB )  

மேலும் பல

செ.வெ.எண்:298- கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

இந்திய அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (National Digital Livestock Mission) மற்றும் தமிழக அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. (PDF 72KB )

மேலும் பல

செ.வெ.எண்:297- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19.06.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 19.06.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 69KB )

மேலும் பல

செ.வெ.எண்:296- 2026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

2026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 573KB )

மேலும் பல

செ.வெ.எண்:295- “கலைஞர் கைவினைத் திட்டத்தில்” தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு!!!

வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026

நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு “கலைஞர் கைவினைத்திட்டம்” மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தகுதியான பொதுமக்கள் இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் துவங்கவும், தொழிலை மேம்படுத்தவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். (PDF 269KB )

மேலும் பல

செ.வெ.எண்:294- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 416KB )

மேலும் பல

செ.வெ.எண்:293- பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது- 2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தினவிழாவின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 19.06.2026-க்குள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. (PDF 393KB )

மேலும் பல

செ.வெ.எண்.292- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 174 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 110KB )

மேலும் பல

செ.வெ.எண்:291- நிபா வைரஸ் தொற்று நீலகிரி மாவட்ட மக்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

கேரளா மற்றும் பிறமாநிலங்களில் நிபா வைரஸ் தொற்று தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டதில் பொதுமக்களின் நலனைகருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள். (PDF 145KB )

மேலும் பல

செ.வெ.எண்:290- நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி

வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026

நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர் (PDF 174KB )

மேலும் பல