• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:530- நீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ. ஜோ அருண் சே.ச, அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்த வருகின்ற 24.09.2025 (புதன்கிழமை) அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர். சிறுபான்மையினர் சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளையும் 24.09.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:529- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 09.09.2024 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 30.09.2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 09.09.2025 அன்று 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001 என்ற முகவரிக்கு உறை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:528- விவசாய தொழில் முனைவோர் வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ 22 கோடி கடன் இலக்கு

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக ஒன்றிய அரசு, வேளாண் உள்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ 2 கோடி கடன் 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பயனாளியின் பங்களிப்பு திட்ட மதிப்பீட்டில் 10 சதவிதமாகும்.(PDF 55KB)

மேலும் பல
01

செ.வெ.எண்.527- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை வட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம் தொட்டபெட்டா ஊராட்சி ஆடாசோலை பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.526- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப்பணிகள் தேர்வு நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/09/2025

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் குடிமைப்பணிகள் தேர்வு (Diploma / ITI Level) கொள்குறி வகை கணிணி தேர்வு (Computer Based Test) எதிர்வரும் 07.09.2025 முற்பகல் 11.09.2025 முதல் 18.09.2025 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் 22.09.2025 முதல் 26.09.2025 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் 27.09.2025 முற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி ஸ்பிரிங் / பீல்ட் பண்டிசோலை குன்னூரில் நடைபெற உள்ளது. இத்தேர்வு மையத்தில் 626 […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.525- சுற்றுலாத்துறை விருதுகள் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025

தமிழ்நாடு சுற்றுலாத்துறை, உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை பல்வேறு விருதுகளை வழங்க உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் உரிய தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினத்தன்று (27.09.2025) சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்:15.09.2025 ஆகும். மேலும் தகவலுக்கு 0423 […]

மேலும் பல

செ.வெ.எண்.524- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வன உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான வன உரிமைகள் குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.523- புதியது மற்றும் புதுப்பித்தல் 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தல்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT, மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Application) விண்ணப்பித்தல்.(PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:522- நீலகிரி மாவட்டத்தில் 04.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2025

04.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: கோத்தகிரி வட்டம், தெங்குமரஹடா கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் தெங்குமரஹடா அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்திலும், உதகமண்டலம் வட்டம், தொட்டபெட்டா கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் ஆடசோலை சமுதாய கூடத்திலும், கூடலூர் வட்டம், நெலாக்கோட்டை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் மேபீல்டு மதரஷ ஹாலிலும் நடைபெறவுள்ளது. (PDF 24KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்.521- தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மைக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.1,500 மதிப்பிலான உயிர் உரங்கள் மற்றும் இடுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்து உபயோகத்திற்குப்பின் பின் விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளைக் கையாள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.(PDF 44KB)

மேலும் பல