• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:486- நீலகிரி மாவட்டத்தில் 21.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2025

21.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 32, 33, 34 மற்றும் 35-ற்கான முகாம் உதகை தேவாங்கர் திருமணமண்டபத்திலும், உதகமண்டலம் வட்டம், நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 15-ற்கான முகாம் பஞ்சாயத்து காலனி சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டம், நெடுகுளா கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கப்பட்டி சமுதாய கூடத்திலும், குந்தா வட்டம், முள்ளிகூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் நேருநகர் சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது.(PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:485- நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மனநல நிறுவனங்களும் ஒரு மாத காலத்திற்குள் தமிழ்நாடு மனநல ஆணையத்தில் பதிவு செய்தல் வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

மாவட்டம் முழுவதும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டிற்கு ஆளானவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் உள்ளிட்ட மனநல நிறுவனங்கள் ஃ மையங்கள் (Mental Health Establishment) செயல்பட்டு வருகின்றன. இத்தகைய மனநல நிறுவனங்கள் / அனைத்தும் மனநல பராமரிப்பு சட்டம் 2017-ன்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டும்.(PDF 44KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:484- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு, இத்தலார், முள்ளிக்கூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.2.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 58KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:483- கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு அரசு மானியத் தொகை வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

தமிழ்நாட்டில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அனுகி விவரம் அறிந்து கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(PDF 61KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:482- முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

நீலகிரி மாவட்டத்தில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, 4 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்க மூலதன மானிய விடுப்பாணைகளை வழங்கினார்.(PDF 44KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:481- நீலகிரி மாவட்டத்தில் 20.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2025

20.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: கோத்தகிரிவட்டம், ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் வள்ளுவர் காலனி சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது.(PDF 41KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:480- தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளுக்கான ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 10 பயனாளிகளுக்கு பல்வேறு கல்வி உதவித்தொகைகளுக்கான காசோலைகள் மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கினார்.(PDF 49KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:479- ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விருது வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் ப்ளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்படாத ப்ளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசால் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் விருது வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள உணவு வணிகர்கள் விண்ணப்பிக்கலாம்.(PDF 64KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:478- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.08.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 92 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:477- நீலகிரி மாவட்டத்தில் 19.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

19.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 29 மற்றும் 30-ற்கான முகாம் பெட்போர்டு பாரதியார் மண்டபத்திலும், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்டவார்டு 5, 15 மற்றும் 16-ற்கான முகாம் தேவாங்கர் திருமண மண்டபத்திலும், கோத்தகிரி வட்டம், குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் குஞ்சப்பனை பல்நோக்குகட்டிடத்திலும், உதகமண்டலம் வட்டம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் தாவனெ சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 41KB)

மேலும் பல