மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்.392- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 159 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 28KB)

மேலும் பல

செ.வெ.எண்:391- சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

2026- ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யாதண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார். (PDF 53KB)

மேலும் பல

செ.வெ.எண்:390- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 264KB)

மேலும் பல

செ.வெ.எண்:389- நீலகிரி அஞ்சல் கோட்டம், காக்காத்தோப்பு, ஃபிங்கர்போஸ்ட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய அஞ்சல் விரிவாக்கக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

நீலகிரி அஞ்சல் கோட்டம், காக்காத்தோப்பு, ஃபிங்கர்போஸ்ட் – 643006 அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அஞ்சல் சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் வழங்கும் நோக்கில் புதிய அஞ்சல் விரிவாக்கக் கிளை (07.08.2026) அன்று தொடங்கப்பட்டுள்ளது. (PDF 60KB)

மேலும் பல

செ.வெ.எண்:388- குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகையினை நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட 08.08.2026 மற்றும் 09.08.2026 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். (PDF 60KB)

மேலும் பல

செ.வெ.எண்:387- சுதந்திர தினமான  15.08.2026  அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

சுதந்திர தினமான 15.08.2026 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி . லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ,ப.. அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:386 – கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)  

மேலும் பல

செ.வெ.எண்:385 – நீலகிரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத/ சேதமடைந்த VHF உபகரணங்கள் பொது ஏலம்

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நீலகிரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத/ சேதமடைந்த VHF உபகரணங்களின் உதிரிபாகங்கள்,பேட்டரிகள் மற்றும் பேட்டரிபேக்குகள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (19.08.2026) அன்றுகாலை 11.௦௦ மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும். (PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:384 – உல்லத்தி மற்றும் கல்லட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி மற்றும் கல்லட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 49KB)  

மேலும் பல

செ.வெ.எண்:382 – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 90.91 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.90.91கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 4 எண்ணிக்கையிலான புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார்கள்.(PDF 202KB)  

மேலும் பல