மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்.436 – நியாய விலைக் கடையில், குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 03/09/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஹெச்.பி.எப் இந்து நகர் நியாய விலைக் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் பணியினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் இன்று (03.09.2026) துவக்கி வைத்தார். (PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்.435 – போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் தேவை – விண்ணப்பிக்க அழைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/09/2026

2026ம் ஆண்டிற்க்கான புதிய பயிற்றுநர்கள் மத்திய/மாநில அரசு போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டத்தின்படி பொது அறிவு ,கணிதம் மற்றும் மனத்திறன் ,பொதுத் தமிழ், ஆங்கிலம் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடத்தலைப்புகளில் தேர்வு செய்யப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள பயிற்றுநர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), கல்விச் சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மற்றும் முகவரிச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் கூடிய விண்ணப்பத்தை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பிங்கர் போஸ்ட், உதகமண்டலம் என்ற முகவரியில் நேரில் சமர்ப்பிக்கலாம். (PDF 54KB)

மேலும் பல

செ.வெ.எண்.434 – சுற்றுலாத்துறை விருதுகள் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் சுற்றுலாத் துறையின் மூலம் அனைத்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் ஓட்டல் முகவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்கிற இணைய தள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.  (PDF 67KB)

மேலும் பல

செ.வெ.எண்:433- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் செப்டம்பர் 2026 மாதத்திற்கு  05.09.2026 மற்றும் 07.09.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:432- கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மற்றும் முதிர் கன்னிகள் தங்கள் விவரங்களை வலைதளத்தில் புதிதாக பதிவு செய்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 01/09/2026

தமிழ்நாட்டில் கைம்பெண்கள்,கணவனால் கைவிடப்பட்டபெண்கள்,முதிர் கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் களைந்து அவர்கள் வாழ்வதற்குரிய வசதிகளை கல்வி,சுகாதாரம்,வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள்அமைப்பது,தொழிற் பயிற்சிகள் வழங்குதல் போன்ற தேவையான திட்டங்களை வகுத்து சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக ‘தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்” செயல்பட்டு வருகிறது. (PDF 51KB)

மேலும் பல

செ.வெ.எண்:431- தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று (31.08.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 31/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஜெம்பார்க் கூட்டரங்கில், தமிழ்நாட்டின் நீர்வளங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம், நீர்வளக்குழுவின் தலைவர் / நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜீவ் பிரதாப் ரூடி அவர்கள் தலைமையில் இன்று (31.08.2026) நடைபெற்றது. (PDF 65KB)

மேலும் பல

செ.வெ.எண்:430- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI -Top class education in schools for OBC,EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 59KB)

மேலும் பல

செ.வெ.எண்:429- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று (28.08.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 43 நபர்களுக்கு ரூ.3.97 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 39KB)

மேலும் பல

செ.வெ.எண்:428- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 29.08.2026 அன்று சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்.  (PDF 208KB)

மேலும் பல

செ.வெ.எண்:427- சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்; பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 44KB)

மேலும் பல