மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
03

செ.வெ.எண்:673- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:672- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்” பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

நீலகிரி மாவட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்” பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:671- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 196 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 44KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:670- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் (BAGIC) மூலம் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்திற்கு (Rabi Season) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.(PDF 55KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:669- 4வது ‘நீலகிரி புத்தகத் திருவிழா”வின் நிறைவு விழா

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 4வது “நீலகிரி புத்தகத் திருவிழா”வின் நிறைவு விழா நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர்கள் எழுதிய ‘சொல்லாத கதை” என்ற புத்தகத்தினை வெளியிட்டு, புத்தக திருவிழாவிற்காக நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, கௌரவித்தார்.(PDF 43KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:668- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின்; “தாயுமானவர் திட்டத்தின்” மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர்  மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் நவம்பர் 2025 மாதத்திற்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய நாட்களில் வழங்கப்படும்.  இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா                    தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 33KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:667- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025

நீலகிரி மாவட்டத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 40KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:666- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரோஜா தோட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

நீலகிரி மாவட்டத்தில், மகளிர் திட்டம் சார்பில், தோடர் பழங்குடியினர் இனத்தை சார்ந்த ரோஜா தோட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 34KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:665- வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை கனமழையிலிருந்தும் காற்றிலிருந்தும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். எனவே விவசாயிகள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி மழை மற்றும் காற்றினால் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:664- நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு அரசு வாகனம் கழிவு நீக்கம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு அரசு வாகனம் எண் TN 43 G 0402 பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை தொழில் நுட்ப உதவியாளர் இ அரசு தானியங்கி பணிமனை உதகமண்டலம் அவர்களின்செயல்முறை ஆணை எண் அ1- 134 -2025 நாள் 12-05-2025 ன்படி மேற்படி வாகனம் முதிர்ந்த நிலையில் (Normal Condemnation) செய்யப்பட்டு          […]

மேலும் பல