செ.வெ.எண்:145- அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது.(PDF 58KB)
மேலும் பலசெ.வெ.எண்:144- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகாரமையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026நீலகிரிமாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட மகளிர் அதிகாரமையம் (District Hub for Empowerment of Women)-ற்கு ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:143- அரசு தலைமை கொறடா அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று ‘உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில், 174 பயனாளிகளுக்கு ரூ.20.98 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 61KB)
மேலும் பலசெ.வெ.எண்:142- நீலகிரி மாவட்டத்தில் 05.03.2026 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026நீலகிரி மாவட்டத்தில் 05.03.2026 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் கலந்து கொண்டோர் விவரம்.(PDF 91KB)
மேலும் பலசெ.வெ.எண்:141- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பழங்குடியின மக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட கப்பாலா, திருமங்கலம், பிஆர்எப் காலனி ஆகிய பகுதியில் வசிக்கும், பழங்குடியின மக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்தும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி என்.எஸ்.நிஷா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:140- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2026-2027 ஆம் ஆண்டிற்கான நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2026நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான – ரூ4726.48 கோடி நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:139- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தேன்கொல்லி கிராமத்தில் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் புனரமைக்கப்பட்ட வீடுகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், ஸ்ரீமதுரை ஊராட்சி தேன்கொல்லி கிராமத்தில், டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில், தலா ரூ.8.20 இலட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட மற்றும் பழுது பார்க்கப்பட்ட 10 வீடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:138- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியின இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காபி டேபிள் புத்தகத்தினை வெளியிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பாரம்பரிய உணவு குறித்து வரும் காலங்களில் பழங்குடியின இளைஞர்களிடையே விழிப்புணர்வு மற்றும் பாரம்பரிய உணவினை பாதுகாப்பது குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய காபி டேபிள் புத்தகத்தினை வெளியிட்டு, பழங்குடியினர்களுக்கு வழங்கினார்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:137- அரசு தலைமை கொறடா அவர்கள் நவீன மேம்படுத்தப்பட்ட உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேத் ஆய்வகத்தினை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக்காட்சி வாயிலாக, ரூ.7.24 கோடி மதிப்பில் நவீன மேம்படுத்தப்பட்ட, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேத் ஆய்வகத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி வைத்து, கேத் ஆய்வகத்தினை பார்வையிட்டார்.(PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:136- அரசு தலைமை அவர்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுற்றுச்சூழல் பூங்கா (Eco Park) திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026நீலகிரி மாவட்டம், உதகை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ரூ.70.23 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா (Eco Park) திட்ட பணிகளுக்கு, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 53KB)
மேலும் பல