செ.வெ.எண்:341- TNPSC தொகுதி-I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொகுதி-I (Group I) சேவைகளுக்கான அறிவிக்கைஎண்.05/2026 வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்பட உள்ளது. (PDF 66KB )
மேலும் பலசெ.வெ.எண்:340- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss courses) போன்ற பயிற்சிகள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026தாட்கோ, நீலகிரி மாவட்டம் – தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டசத்து இயல் (Nutrition & Dietetics) உடல் எடை சீரமைப்பு (Slimming & Weight loss courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது . (PDF 67KB )
மேலும் பலசெ.வெ.எண்:339- அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் பழங்குடியினர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு!!!
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்(AABCS) கீழ் பழங்குடியினர் தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.அவர்கள் அழைப்பு!!! (PDF 68KB )
மேலும் பலசெ.வெ.எண்:338- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய் 1 கோடி வழங்கப்படும். (PDF 63KB )
மேலும் பலசெ.வெ.எண்:337- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம் கால அவகாசம் (30.06.2026)லிருந்து 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 48KB )
மேலும் பலசெ.வெ.எண்:336- தமிழ்நாடு காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு கண்காணிப்பு குழு அமைத்தல்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026காவல் துறையில் “ஆர்டர்லி சிஸ்டம்” (Orderly System) முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை கண்காணித்து செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவினை அமைத்து உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுப்படி நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட அளவிலான குழு 02.02.2026 அன்று அமைக்கப்பட்டுள்ளது. (PDF 90KB )
மேலும் பலசெ.வெ.எண்:335- தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம். (09.07.2026 – 15.07.2026)
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026ஓவ்வொரு வருடமும் ஜுலை இரண்டாவது வாரத்தில் (09.07.2026 – 15.07.2026) தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரமாகவும், 15.07.2026 அன்று உலக இளைஞர் திறன் நாள் (World Youth Skills Day) என்பதால் திறன்பயிற்சிகள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாணவ / மாணவியர்களுக்கு நடத்தப்பட உள்ளது. (PDF 64KB )
மேலும் பலசெ.வெ.எண்:334- நெடுகுளா மற்றும் ஜக்கனாரை ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (08.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நெடுகுளா மற்றும் ஜக்கனாரை ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB )
மேலும் பலசெ.வெ.எண்:333- கோத்தகிரி வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -08.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் நெடுகுளா கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 60 பயனாளிகளுக்கு ரூ.37.59 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (08.07.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB )
மேலும் பலசெ.வெ.எண்:332- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 43KB )
மேலும் பல