செ.வெ.எண்:430- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI -Top class education in schools for OBC,EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:429- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இன்று (28.08.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 43 நபர்களுக்கு ரூ.3.97 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 39KB)
மேலும் பலசெ.வெ.எண்:428- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 29.08.2026 அன்று சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். (PDF 208KB)
மேலும் பலசெ.வெ.எண்:427- சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026நீலகிரி மாவட்டம் உதகை வட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும்; பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:426- மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026நீலகிரி மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டப் பணிகளான வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை 30 நாட்கள் நடைபெற்று வருகின்றன. (PDF 89KB)
மேலும் பலசெ.வெ.எண்:425- 2026-27 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்படத்தக்க வகையில் 2026-27 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் 72 கிராமங்களில் 24.08.2026 முதல் 20.01.2027 வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. (PDF 155KB)
மேலும் பலசெ.வெ.எண்:424- சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 28.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் (28.08.2026) அன்று காலை 10.00 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. (PDF 179KB)
மேலும் பலசெ.வெ.எண்:423- ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மும்பையில் கள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.7. நாள்:11.08.2026-ல் ஹஜ் 2027-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப. நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. (PDF 204KB)
மேலும் பலசெ.வெ.எண்:422- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-09-2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மாநில கணக்காயர், சென்னை அவர்களின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் மன்றக் கூட்டமானது 11-09-2026 அன்று முற்பகல் 10.00 மணியளவில், கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வூதியர்கள் தங்களது மாநில கணக்காயர் தொடர்புடைய ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்புநிதி தொடர்பான கோரிக்கைகளை 28-08-2026 க்குள் கருவூல அலுவலர், நீலகிரி அவர்களுக்கு அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (PDF 121KB)
மேலும் பலசெ.வெ.எண்:421- நீலகிரி மாவட்டத்தில் மிலாடி நபி- 26.08.2026 தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 26.08.2026 அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF 91KB)
மேலும் பல