மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:454- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்பபணிகள் (நேர்முகத்தேர்வுஇல்லாதபணிகள்) தேர்வானது நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த தொழில் நுட்பபணிகள் (நேர்முகத்தேர்வுஇல்லாதபணிகள்) தேர்வானது நீலகிரிமாவட்டத்தில், உதகமண்டலம் அரசுகலைக் கல்லூரியினைத் தேர்வுக்கூடமாகத் தேர்வுசெய்யப்பட்டு, 19.09.2026 அன்று முற்பகல் கொள்குறிவகை தேர்வும்(OMR test), பிற்பகல்விரிவானமுறைத்தேர்வும் (Descriptive Type Test) நடைபெறவுள்ளது. கொள்குறி வகை தேர்வில் (OMR test) 498 தேர்வர்களும், விரிவான முறைத்தேர்வில்(Descriptive Type Test) 03தேர்வர்களும்பங்கேற்கஉள்ளனர். (PDF 69KB)

மேலும் பல

செ.வெ.எண்:453- வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

VB- GRAM (G)- வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு திட்டத்தின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், வளர்ச்சியடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், தமிழ்நாடு சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி (Ombudsperson) உருவாக்கப்பட்டுள்ளது. (PDF 67KB)

மேலும் பல

செ.வெ.எண்:452- 16.09.2026 அன்று முற்பகல் 09.00 மணியளவில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்’ என்ற திட்டமானது குன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

தமிழ்நாடு அரசு மூலம் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு,உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, எதிர்வரும் 16.09.2026 அன்று முற்பகல் 09.00 மணியளவில்; ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது குன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது. (PDF 29KB)

மேலும் பல

செ.வெ.எண்:450- விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் சக்கர பலகை (Skate Board) விளையாட்டு மாதிரி பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

நீலகிரி மாவட்டம் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயன்பெறும் வகையில் சக்கர பலகை (Skate Board) விளையாட்டு மாதிரி பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 58KB)

மேலும் பல

செ.வெ.எண்:446- குன்னூர் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

குன்னூர் வட்டம் அதிகரட்டி, ஜெகதளா பேரூராட்சி மற்றும் எடப்பள்ளி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB)  

மேலும் பல

செ.வெ.எண்:449- விநாயகர் சதுர்த்திவிழா, 2026 இன் போது சிலைகள் பிரதிஷ்டை, ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா எதிர்வரும் 14.09.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும் நீர்நிலைகளில்கரைப்பதற்கும் மத்திய மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள், அரசு ஆணைகள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. (PDF 581KB)

மேலும் பல

செ.வெ.எண்:448- சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2026-27)

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/ மாணவியர்க்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.(PDF 87KB)

மேலும் பல

செ.வெ.எண்:447- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டார் நிறுவுவதற்கும் தற்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. (PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:445- கூடலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் பாடந்தொரை கிரௌண் பிளாசா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 50 பயனாளிகளுக்கு ரூ.70.90 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (09.09.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:444- மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (09.09.2026) துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

நீலகிரி மாவட்டம் உதகை எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.09.2026) துவக்கி வைத்தார். (PDF 47KB)

மேலும் பல