மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:410- மாவட்ட கால்நடைப் பண்ணையில் உள்ள 4 கற்பூரமரங்கள் 01.09.2026 அன்றும் கழிவு செய்யப்பட்ட 2 நான்கு சக்கர வாகனங்கள் 02.09.2026 அன்றும் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

கால்நடை பராமரிப்புத்துறை, உதகமண்டலம் மாவட்ட கால்நடைப் பண்ணையின் நுழைவாயில் பகுதியில் உள்ள நான்கு எண்ணிக்கை கற்பூரமரங்கள் எதிர்வரும் 01.09.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவிலும் மாவட்ட கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட இரண்டு எண்ணிக்கை நான்கு சக்கர வாகனங்கள் 02.09.2026 அன்று பிற்பகல் 2.00 மணியளவிலும் ஏலக்குழுவினர் முன்னிலையில் ஏலமிடப்பட உள்ளன. (PDF 57KB)

மேலும் பல

செ.வெ.எண்:409- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21.08.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது.  (PDF 141KB)

மேலும் பல

செ.வெ.எண்:408- தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் அனைத்து கேபிள் சேனல்களும் பெறும் வகையில் 200க்கும் மேற்பட்ட சேனல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் மூலம் பொதுமக்கள் குறைந்த விலையில் அனைத்து கேபிள் சேனல்களும் பெறும் வகையில் அனைத்து முக்கிய சேனல்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட சேனல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் நிறுவப்பட்ட தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் கேபிள் இணைப்பிற்கு முதலில் இணைப்பு கட்டணமாக ரூ500/-ம் மாதந்தோறும், ரூ140/- மற்றும் ஜிஎஸ்டி மட்டுமே மாதாந்திர வாடகை தொகையாக பொது மக்கள் நலன் கருதி நிர்ணயம் செய்யப்பட்டு சேவை வழங்கப்பட்டு […]

மேலும் பல

செ.வெ.எண்:407- தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

தமிழ்நாட்டைச் சேர்ந்த பௌத்தர்கள் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன விழாவில் கலந்து கொண்டு திரும்புபவர்களுக்கு நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5000/- வரை மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2026 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 64KB)

மேலும் பல

செ.வெ.எண்.406- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (17.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 137 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:405- உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் தானியங்கி பால் வழங்கும் நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில், தானியங்கி பால் வழங்கும் நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 55KB)

மேலும் பல

செ.வெ.எண்:403- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2026

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டிற்கு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் 45 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறுதல். (PDF 73KB)

மேலும் பல

செ.வெ.எண்:402- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எடப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி கிராமத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15.08.2026) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். (PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:401- 80வது சுதந்திர தின விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். (PDF 53KB)

மேலும் பல

செ.வெ.எண்:400- உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (14.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டபெட்டா, நஞ்சநாடு மற்றும் இத்தலார் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 51KB)

மேலும் பல