செ.வெ.எண்:374- பழங்குடியினர்களுக்கு வன உரிமைகள் வழங்குவது தொடர்பான குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பழங்குடியினர்களுக்கு வன உரிமைகள் வழங்குவது தொடர்பான குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026) நடைபெற்றது. (PDF 21KB )
மேலும் பலசெ.வெ.எண்:373- 2027 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது. (PDF 49KB )
மேலும் பலசெ.வெ.எண்:372- விவசாய தொழில் முனைவோர் வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ 16 கோடி கடன் இலக்கு
வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக ஒன்றிய அரசு, வேளாண் உள்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ 2 கோடி கடன் 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பயனாளியின் பங்களிப்பு திட்ட மதிப்பீட்டில் 10 சதவிதமாகும். (PDF 51KB )
மேலும் பலசெ.வெ.எண்:371- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 01.08.2026 சனிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 01.08.2026 சனிக்கிழமை அன்று குன்னூர் பிராவிடன்ஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. (PDF 71KB )
மேலும் பலசெ.வெ.எண்:370- நீலகிரி மாவட்ட பள்ளி மாணவ மாணவியர்களுக்கான கலைப்போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026கலை பண்பாட்டுத்துறையின் கோயம்புத்தூர் மண்டலம் சார்பாக நீலகிரி சவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) எதிர் வரும் 02.08.2026 அன்று காலை 10.00 மணி முதல் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. (PDF 63KB )
மேலும் பலசெ.வெ.எண்.369- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (27.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 195 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 38KB )
மேலும் பலசெ.வெ.எண்:368- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (24.07.2026) நடைபெற்றது. (PDF 21KB )
மேலும் பலசெ.வெ.எண்:367 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (24.07.2026) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், 2026-2027 ஆம் கல்வியாண்டில் மேல்நிலைப் பள்ளிக் கல்வியை நிறைவு செய்த அனைத்து மாணவர்களும் உயர்கல்வியில் தொடர்ந்து சேர்வதை உறுதி செய்யும் நோக்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் உயர்கல்வி சேர்க்கைக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று (24.07.2026) நடைபெற்றது. (PDF 36KB )
மேலும் பலசெ.வெ.எண்:366 – ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 24/07/20262026-ம் ஆண்டிற்க்கான சுதந்திர தினத்தன்று ஜீவன் ரக்க்ஷா பதக்கவிருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 35KB )
மேலும் பலசெ.வெ.எண்:365 – உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (23.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (23.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB )
மேலும் பல