செ.வெ.எண்:70- தேசிய குடற்புழு நீக்க நாள்
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025இந்தியாவில் ரத்த சோகையை அடியோடு தடுக்க தேசிய குடற்புழு நீக்க நாள் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வருடத்திற்கு இரண்டு (2) முறை அனுசரிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான முதல் சுற்று பிப்ரவரி 10 ஆம் தேதியும் இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 23 தேதியும் நடைபெறுகிறது. தற்பொழு நீலகிரி மாவட்டத்தில் முதல் சுற்று தேசிய குடற்புழு நீக்க முகாம் பிப்ரவரி 10.02.2025 (திங்கட்கிழமை) அன்று நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 17.02.2025 அன்றும் நீலகிரி மாவட்டத்தில் விடுப்பட்ட மாணவ, […]
மேலும் பலசெ.வெ.எண்:69- நீலகிரி மாவட்டத்தில் மாண்பமை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025நீலகிரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இ-பாஸ் (E-Pass), தடைப்படுத்தப்பட்டுள்ள நெகிழி வகைகள், தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம், சாலை பராமரிப்பு மற்றும் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் முதலான செயல்பாடுகள் குறித்து மாண்பமை உயர்நீதிமன்ற வழக்குறைஞர் திரு.ஊ. மோகன் அவர்களால் இன்று 08.02.2025 மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:68- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.03.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ‘ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்” எதிர்வரும் 06-03-2025 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.(PDF 37KB)
மேலும் பலசெ.வெ.எண்:67- நீலகிரி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாள் (11.02.2025) தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 08/02/2025நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் வள்ளலார் நினைவு நாள் (11.02.2025) தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11.02.2025 தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:66- கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு கூடுதல் தலைமைச் செயலாளர் / இயக்குநர் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித்துறை தலைவர் திரு.விக்ரம் கபூர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 37KB)
மேலும் பலசெ.வெ.எண்:65- நீலகிரி மாவட்டத்தில், ‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025நீலகிரி மாவட்டத்தில், ‘கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு” உறுதி மொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.(PDF 24KB)
மேலும் பலசெ.வெ.எண்:64- பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – பிப்ரவரி -2025
வெளியிடப்பட்ட நாள்: 07/02/2025நீலகிரி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர்களுக்கான ‘பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில10-02-2025-அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெறவுள்ளது. (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:63- நீலகிரி மாவட்டத்தில் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025நீலகிரி மாவட்ட அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மீள்தன்மை தொடர்பான பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:62- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 21KB)
மேலும் பலசெ.வெ.எண்:61- தமிழ்நாடு வாழ்ந்துகாட்டுவோம் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/02/2025தொழில் முனைவோர் தங்கள் நிறுவனங்களை முறையான இணக்கங்களுடன் முறைப்படுத்த வாழ்ந்துகாட்டுவோம் திட்டம், TN-RISE வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 35KB)
மேலும் பல