மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:167- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்படும் வாகன சோதனை தணிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர்கள்; மேற்கொள்ளப்படும் வாகன சோதனை தணிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.(PDF 212KB)

மேலும் பல

செ.வெ.எண்:166- மாவட்ட அளவிலான தொழில் பங்குதாரர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்குதாரர்களை (District Level Franchisee Partners – DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.(PDF 614KB)  

மேலும் பல

செ.வெ.எண்:165- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 204KB)

மேலும் பல

செ.வெ.எண்:164- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – குறித்த மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தியாளர்கள் சந்திப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்:                                      […]

மேலும் பல

செ.வெ.எண்:163- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருப்பு வைத்திடுமாறு தெரிவித்துள்ளார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேதி அறிவிக்கப்பட்டதன் விளைவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திடுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்(PDF 69KB)

மேலும் பல

செ.வெ.எண்:162- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2026

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக எரிவாயு உருளை விநியோகம் தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், உணவக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 58KB)

மேலும் பல