செ.வெ.எண்:797- கால்நடை வளர்ப்புத்துறையின் செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025கால்நடை வளர்ப்புத்துறையின் செய்தி வெளியீடு.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:796- அஞ்சல் துறையில் நவீன டிஜிட்டல் சேவைகள் – பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மற்றும் ஆன்லைன் வழியாக வழங்கப்படும் முக்கிய சேவைகள் வருமாறு: e-KYC (மின்னணு அடையாள உறுதிப்படுத்தல்) Internet Banking (இணைய வங்கி சேவை) – Mobile Banking (மொபைல் வங்கி சேவை) ATM சேவைகள் தனிப்பயன் (Personalized) ATM கார்டுகள் ஆதார் இணைப்பு (Aadhaar Seeding) நீலகிரி கோட்டத்திற்க்குட்பட்ட உதகமண்டலம் தலைமை அஞ்சலகத்தில் பொதுமக்களின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீட்டிக்கப்பட்ட அலுவலக நேரம் […]
மேலும் பலசெ.வெ.எண்:795- இந்திய அஞ்சல் துறையின் கடிதம்/பார்சல் புக்கிங்சேவை விரிவுப்படுத்தப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 24/12/2025நீலகிரி கோட்டத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வணிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின்படியும் பொதுமக்களின் சேவையைக்கருதியும் கடிதம்/பார்சல் புக்கிங்சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் இதனை தொடர்ந்து இந்த சேவையை விரிவுபடுத்தும் விதமாக வாடிக்கையாளர்களின் நலன்கருதி நீலகிரி கோட்டத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் துணை அஞ்சலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தலைமை அஞ்சலகத்தில்: காலை 8 மணி முதல் மாலை 8 […]
மேலும் பலசெ.வெ.எண்:794- நீலகிரி மாவட்டத்தில் 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 21750 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் NADCP 8வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 29.12.2025 முதல் 28.01.2026 வரை நடைபெற உள்ளது.(PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:793- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நல்லோசை – களமாடுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட “நல்லோசை – களமாடுதல்” போட்டியில், வெற்றி பெற்ற 58 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச்சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:792- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தனது அறிக்கையில்:- மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு: Dispenser (AYUSH) Therapeutic Assistant (Male – 01 vacancy) Audiologist-Speech Therapist Audiologist Audiometrician Staff Nurse (RCH & NCD) Lab Technician Health Inspector (HI Grade-II) Pharmacist ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படஉள்ளது. (PDF 504KB)
மேலும் பலசெ.வெ.எண்:791- குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகையினை நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை 31.12.2025-ம் தேதிக்குள் நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். வேலை நாட்களில் தாங்கள் பொருள் பெறும் நியாயவிலை கடைக்கு நேரில் சென்று குடும்பத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களது கைவிரல் ரே-கையினை பதிவுசெய்து கொள்ளலாம். (PDF 430KB)
மேலும் பலசெ.வெ.எண்:790- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடனான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:789- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:788- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி.(PDF 60KB)
மேலும் பல
