மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:449- விநாயகர் சதுர்த்திவிழா, 2026 இன் போது சிலைகள் பிரதிஷ்டை, ஊர்வலம் மற்றும் நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திவிழா எதிர்வரும் 14.09.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதால், விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும் நீர்நிலைகளில்கரைப்பதற்கும் மத்திய மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்கள், அரசு ஆணைகள் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுகளின்படி விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. (PDF 581KB)

மேலும் பல

செ.வெ.எண்:448- சிறுபான்மையின முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2026-27)

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/ மாணவியர்க்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.(PDF 87KB)

மேலும் பல

செ.வெ.எண்:447- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு மானியத்தில் மின்மோட்டார் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2026

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், பழைய மின்மோட்டாரை மாற்றி புதிய மின்மோட்டார் நிறுவுவதற்கும் தற்போது மானியம் வழங்கப்பட்டு வருகிறது. (PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:445- கூடலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் பாடந்தொரை கிரௌண் பிளாசா திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 50 பயனாளிகளுக்கு ரூ.70.90 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (09.09.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:444- மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (09.09.2026) துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

நீலகிரி மாவட்டம் உதகை எச்.ஏ.டி.பி விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.09.2026) துவக்கி வைத்தார். (PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:443- விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானியத்தில் வழங்குதல்

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் இயந்திரமயமாக்குதல் துணை இயக்கத்திட்டம் 2026-27-ன்கீழ் விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற்றுப் பயன்பெறலாம். (PDF 62KB)

மேலும் பல

செ.வெ.எண்:442- ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு 3 பணியாளரை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் ,தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 50KB)

மேலும் பல

செ.வெ.எண்.441- முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலை வாய்ப்பு கருத்தரங்கு மற்றும் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

நீலகிரி மாவட்டத்தைச்சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு பிங்கர் போஸ்ட்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெறவுள்ளது. (PDF 45KB)

மேலும் பல

செ.வெ.எண்.440- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (07.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 225 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 28KB)

மேலும் பல

செ.வெ.எண்:439- விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள்

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2026

நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (PDF 60KB)

மேலும் பல