மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:398- நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் (15.08.2026) மதுக் கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 (FL-1) அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள்(டாஸ்மாக்), எப்.எல்.2 (FL-2) கிளப் பார்கள், எப்.எல்.3 (FL-3) ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ (FL-3A) ஆகியவற்றில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15.08.2026 தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF 68KB)

மேலும் பல

செ.வெ.எண்:397- நீலகிரி உயிர்ச்சோலை புத்தகம் மற்றும் இணையதளத்தினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் இன்று(13.08.2026) வெளியிட்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026

நீலகிரி உயிர்ச்சோலை இயற்கையோடு இணைந்த கற்றல் தொடர்பான புத்தகம் மற்றும் இணையதளத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் வெளியிட்டார்.  (PDF 54KB)

மேலும் பல

செ.வெ.எண்:396- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் சிறப்புக் கணக்கெடுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

நீலகிரி மாவட்டத்தில் ‘அனைத்து குழந்தைகளும் பள்ளியில்’ (All children in schools -ACIS) மற்றும் ‘இடைநிற்றல் இல்லாத நிலை’ (Zero Dropout) ஆகிய இலக்குகளை அடைவதற்காக 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் சிறப்புக் கணக்கெடுப்புப் பணி 03.08.2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் கல்வியாண்டில் 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. (PDF […]

மேலும் பல

செ.வெ.எண்:395- நீலகிரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் “ஹர் கர் திரங்கா” தேசப்பற்று சாலைப் பேரணி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

80-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் 2026 – “ஹர் கர் திரங்கா” தேசப்பற்று சாலைப் பேரணி 2026 ஆம் ஆண்டின் இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நீலகிரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் “ஹர் கர் திரங்கா” தேசப்பற்று சாலைப் பேரணி நடைபெற்றது. அஞ்சல் ஊழியர்கள் தேசியக் கொடியை ஏந்திச் சென்று ஒற்றுமை, தேசியப் பெருமை மற்றும் மூவர்ணக் கொடியின் மீதான தேசப்பற்றை எடுத்துரைக்கும் வகையில் தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர். (PDF 204KB)

மேலும் பல

செ.வெ.எண்:394- குன்னூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -12.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026

நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் உபதலை கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 47 பயனாளிகளுக்கு ரூ.63.32 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (12.08.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 36KB)

மேலும் பல

செ.வெ.எண்.393- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு – DRUG FREE TAMILNADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. (PDF 56KB)

மேலும் பல

செ.வெ.எண்.392- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 159 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 28KB)

மேலும் பல

செ.வெ.எண்:391- சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026

2026- ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு வருகிற 15.08.2026 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யாதண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார். (PDF 53KB)

மேலும் பல

செ.வெ.எண்:390- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நடைபெறுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 264KB)

மேலும் பல

செ.வெ.எண்:389- நீலகிரி அஞ்சல் கோட்டம், காக்காத்தோப்பு, ஃபிங்கர்போஸ்ட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய அஞ்சல் விரிவாக்கக் கிளை தொடங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026

நீலகிரி அஞ்சல் கோட்டம், காக்காத்தோப்பு, ஃபிங்கர்போஸ்ட் – 643006 அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அஞ்சல் சேவைகளை பொதுமக்களுக்கு எளிதில் வழங்கும் நோக்கில் புதிய அஞ்சல் விரிவாக்கக் கிளை (07.08.2026) அன்று தொடங்கப்பட்டுள்ளது. (PDF 60KB)

மேலும் பல