மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:633- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம் 2025-2026 – 50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் வழங்கும் திட்டம் செயல்படுத்துதல். தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும்,  கால்நடைகளின் செறிமான தன்மையை அதிகரித்திடவும் உற்பத்தித்திறனை பெருக்கவும், வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு, 50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தி, நீலகிரி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறைக்கென […]

மேலும் பல
01

செ.வெ.எண்:632- உதகை அன்பு அறிவு அறக்கட்டளை இல்லம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு “Coffee With Collector” நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டம் உதகை அன்பு அறிவு அறக்கட்டளை இல்லம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, Coffee With Collector நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:631- நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் (African Swine Fever) உறுதி செய்யயப்பட்டுள்ளது. எனவே, பன்றி வளர்ப்போர் மற்றும் பண்ணைகள் அமைத்து பன்றிகள் வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நோய் பன்றிகளுக்கு மட்டுமே பரவக்கூடியதால், இதர கால்நடை வளர்ப்போர் அச்சப்பட தேவையில்லை. மேலும் இந்நோய் மனிதர்களுக்கு பரவக்கூடியதும் இல்லை. எனவே பன்றிகள் வளர்க்கும் தனிநபர்கள் மற்றும் பண்ணையாளர்கள் இந்நோய் குறித்து அறிந்து கொள்ளவும், இக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்ள அருகில் […]

மேலும் பல

செ.வெ.எண்:630- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பயனடைந்து வரும் குழந்தைகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவு, வளர்ப்பு பராமரிப்பு, பிற்காப்பு பராமரிப்பு, மாண்புமிகு பிரதமரின் கோவிட் 19 நிவாரணநிதி, மாண்புமிகு முதலமைச்சரின் கோவிட் 19 நிவாரண நிதி ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகளுடனான கலந்துரையாடல், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 51KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:629- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 133 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 50KB)

மேலும் பல

செ.வெ.எண்:628- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மற்றும் பழங்குடியினர்களுக்கான வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 இலட்சம் மதிப்பில் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் ரூ.85 இலட்சம் மதிப்பில் பழங்குடியினர்களுக்கான 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என 8 வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:627- நீலகிரி மாவட்டத்தில் 14.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

09.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 19, 20 மற்றும் 21-ற்கான முகாம் கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்திலும், கூடலூர் வட்டம், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 7, 11, 14, 15, 16, 17, 18 -ற்கான முகாம் எல்லமலை சமுதாய கூடத்திலும், உதகமண்டலம் வட்டம், தூனேரி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான முகாம் மேல்தொரையட்டி சமுதாய கூடத்திலும், பந்தலூர் வட்டம். நெலாக்கோட்டை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் குந்தலாடி பாத்திமா […]

மேலும் பல
02

செ.வெ.எண்:626- நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நடைப்பெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2025

நீலகிரி மாவட்டத்தில் இன்று 12.10.2025(ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைப்பெற்ற முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை- 1 ஆகிய பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு 6 மையங்களில் நடைப்பெற்றது. இத்தேர்வு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பார்வையிடும்போது முதன்மைக்கல்வி அலுவலர், உதகை வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். இத்தேர்விற்கு 1596 தேர்வர்கள் விண்ணப்பித்து 1476 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 120 […]

மேலும் பல
02

செ.வெ.எண்:625- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 11/10/2025

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 47KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:624- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் சினையுற்ற கறவை பசுக்களுக்கு “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025

மாண்புமிகு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்டுள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், 100 ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்” (அடர் தீவனம், தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்) செயல்படுத்தப்படுகிறது.(PDF 46KB)

மேலும் பல