செ.வெ.எண்:352 – “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (15.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (15.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB )
மேலும் பலசெ.வெ.எண்:351 – கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/07/20262026 – சூலை 18 தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 14.07.2026 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றது. போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது. (PDF 168KB )
மேலும் பலசெ.வெ.எண்:350- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17.07.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17‘.07.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 65KB )
மேலும் பலசெ.வெ.எண்:349- உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026நீலகிரி மாவட்டத்தில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (PDF 61KB )
மேலும் பலசெ.வெ.எண்:348- சமூகநீதி கல்லூரி விடுதிககளுக்கு Professional Outsourcing Agency மூலம் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கீழ் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு, தூய்மைப்பணியாளர் பணியிடங்களை தொழில் அனுபவம் மிக்க Professional Outsourcing Agency மூலம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (PDF 49KB )
மேலும் பலசெ.வெ.எண்:347- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் மூலம் ஒவ்வொடு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. (PDF 69KB )
மேலும் பலசெ.வெ.எண்.346- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (13.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 146 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 45KB )
மேலும் பலசெ.வெ.எண்:345- 15.07.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்’ என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026தமிழ்நாடு அரசு மூலம் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு,உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, எதிர்வரும் 15.07.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில்; ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது பந்தலூர் வட்டத்தில் நடைபெற உள்ளது. (PDF 43KB )
மேலும் பலசெ.வெ.எண்:344- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்ப நல செயலகம்த) சார்பில், உலக மக்கள் தொகை தினம் 2026-ஐ முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு ரதத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.07.2026) கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார். (PDF 30KB )
மேலும் பலசெ.வெ.எண்:343- தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பெற்ற சூலை 18ஆம் நாளான தமிழ்நாடு நாளினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2026தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பெற்ற சூலை 18ஆம் நாளான தமிழ்நாடு நாளினை மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்திக் கொண்டாடுமாறு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ்வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். (PDF 366KB )
மேலும் பல