தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 தொடர்பாக தேர்தல் பணிகள் சுமூகமாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தினால், நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு (108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர்) பொது பார்வையாளர்கள், காவல் பார்வையாளர் மற்றும் செலவுக் கண்காணிப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.(PDF 727KB)
மேலும் பலசெ.வெ.எண்:169- நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் காலத்தில் பறிமுதல் செய்யப்படும் பணம் மற்றும் பொருட்கள் தொடர்பான பொதுமக்களின் குறைகளை விரைவாகவும், நியாயமாகவும் தீர்க்கும் வகையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (பழைய கட்டிடம்) மாவட்ட குறைதீர் குழு (District Grievance Committee) அமைக்கப்பட்டுள்ளது.(PDF 168KB)
மேலும் பலசெ.வெ.எண்:168- நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026– ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தினால், நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள்: 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர்: திருமதி லதா மனோஜ், இ.கா.ப செலவு கண்காணிப்பு பார்வையாளர்கள்: 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திரு. […]
மேலும் பலசெ.வெ.எண்:167- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்படும் வாகன சோதனை தணிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பறக்கும் படை குழுவினர்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர்கள்; மேற்கொள்ளப்படும் வாகன சோதனை தணிக்கைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி நிஷா இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு செய்தார்.(PDF 212KB)
மேலும் பலசெ.வெ.எண்:166- மாவட்ட அளவிலான தொழில் பங்குதாரர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்குதாரர்களை (District Level Franchisee Partners – DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.(PDF 614KB)
மேலும் பலசெ.வெ.எண்:165- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்களுடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 204KB)
மேலும் பலசெ.வெ.எண்:164- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – குறித்த மாவட்ட தேர்தல் அலுவலரின் செய்தியாளர்கள் சந்திப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பை கீழ்கண்டவாறு வெளியிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கும் நாள்: […]
மேலும் பலசெ.வெ.எண்:163- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருப்பு வைத்திடுமாறு தெரிவித்துள்ளார்கள்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 தேதி அறிவிக்கப்பட்டதன் விளைவாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் படைக்கலன் உரிமம் பெற்று படைக்கலன் வைத்திருக்கும் உரிமதாரர்கள் தங்களது படைக்கலன்களை அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக இருப்பு வைத்திடுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்(PDF 69KB)
மேலும் பலசெ.வெ.எண்:162- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எரிவாயு உருளை விநியோகம் தொடர்பான துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 14/03/2026வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக எரிவாயு உருளை விநியோகம் தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, எண்ணெய் நிறுவன மேலாளர்கள், எரிவாயு விநியோகஸ்தர்கள், உணவக உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள், காவல்துறை மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 58KB)
மேலும் பல