செ.வெ.எண்:220- நீலகிரி மாவட்டத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வார விழா நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025நீலகிரி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற தமிழ் வார விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற அரசுப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 30 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, கௌரவித்தார்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:219- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 05/05/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:218- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கக்குச்சி ஊராட்சியில் புதிய சமூதாய கூடம் கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/05/2025நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் வாழும் பகுதியில் ரூ.5.75 கோடி செலவில் 23 சமுதாய கூடங்கள் கட்டப்படும்மென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்ததை தொடர்ந்து உதகை ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்குட்பட்ட பெட்டு மந்து பகுதியில் ரூ.15 இலட்சம் மதிப்பில் புதிய சமூதாய கூடம் கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 99KB)
மேலும் பலசெ.வெ.எண்:217- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 13-வது காய்கறி காட்சியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 03/05/2025நீலகிரி மாவட்டத்தில், கோடை விழாவின் முதல் நிகழ்வாக நடைபெற்ற 13-வது காய்கறி காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.(PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:216- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2025நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 116KB)
மேலும் பலசெ.வெ.எண்:215- தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2025தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:214- நீலகிரி மாவட்டத்தில் மே தினத்தை (01.05.2025) முன்னிட்டு மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் எப்.எல்.1 (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 (FL2) கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ (FL3A) ஆகியவற்றில் காந்தி மே தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 01.05.2025 அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:213- நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். 1. IT Co-Ordinator (01பணியிடம்)- தகுதி: MCA/BCA 2.Echo Technician (01 பணியிடம்)- தகுதி: B.Sc/Dipl in Cardiac Technology/Dipl in Medical Imaging Technology, 3. Data entry Operator (04 பணியிடங்கள்) தகுதி: ஏதேனும் ஒருபட்டப்படிப்பு / டிப்ளோமா (கணினி செயலிகள் அறிவு பெற்றிருக்க […]
மேலும் பலசெ.வெ.எண்:212- நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025நீலகிரி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் காலியாக உள்ள 126 ஊர்க்காவல் படையினருக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். ஊர்க்காவல் படையில் சேர்த்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண் / பெண் விண்ணப்பிக்கலாம்.(PDF 26KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 141 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 36KB)
மேலும் பல