செ.வெ.எண்:260- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற 66 வது பழக்காட்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.05.2026) பார்வையிட்டார். (PDF 60KB )
மேலும் பலசெ.வெ.எண்:259- 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று (27.05.2026) நடைபெற்றது.(PDF 34 KB )
மேலும் பலசெ.வெ.எண்:258- பொது பதிவுதாரர்களுக்கு காலாண்டு தோறும் உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். (PDF 71KB )
மேலும் பலசெ.வெ.எண்:257- 2027 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026மேண்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது. (PDF 47KB )
மேலும் பலசெ.வெ.எண்:256- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60KB )
மேலும் பலசெ.வெ.எண்:255- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB )
மேலும் பலசெ.வெ.எண்:254- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 01.06.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 30.06.2026 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 01.06.2026 அன்று 11.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் […]
மேலும் பலசெ.வெ.எண்:253- திருக்குறள் திருப்பணிகள் திட்டம் நிறைவு விழா இன்று (25.05.2026) உதகை, சி.எஸ்.ஐ (சி.எம்.எம்) மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டந்தோறும் திருக்குறள் திருப்பணிகள் திட்டம் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, பொதுமக்களிடையே திருக்குறள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று மையங்களில் நுண்பயிற்சி வகுப்புகள் திட்டமிடப்பட்டு 30 வாரங்கள் தொடர் பயிற்சியளிக்கப்பட்டது.அதன் நிறைவு விழா இன்று (25.05.2026) உதகை, சி.எஸ்.ஐ (சி.எம்.எம்) மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. (PDF 48KB )
மேலும் பலசெ.வெ.எண்:252- தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் நலத்திட்ட வழங்கப்படும் உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் மூலம் நலத்திட்ட வழங்கப்படும் உதவிகள் பற்றிய செய்தி வெளியீடு. (PDF 48KB )
மேலும் பலசெ.வெ.எண்:251- தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பு [CPEI] ஜீன் 2025 முதல் தொடங்கவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/05/2026தமிழ்நாடு அரசின் குறுசிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் MSME துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது தமிழ்நாட்டில் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைத்தலுக்கான கலாச்சாரத்தை வளர்க்கவும், உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கவும செயல்பட்டு வருகிறது. தற்போது, அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் (EDII AHMEDABAD) இணைந்து மூன்றாம் ஆண்டிற்கான, ஓராண்டு தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்க சான்றிதழ் கல்விக்கான (BATCH 3) சேர்க்கையை தொடங்கியுள்ளது. (PDF 61KB ).
மேலும் பல