செ.வெ.எண்:205- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு, 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:204- இரண்டாம் கட்ட தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) – 15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு, மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தின், இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணியினை (Randomization) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர்கள் தலைமையிலும், வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்படும் முகவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:203- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பினை, பொது பார்வையாளர் 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு.எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்கள்.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:202- தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடவிருக்கும் பணியாளர்களுக்கான தபால் மூலம் வாக்கு செலுத்துதல் குறித்த அறிவிக்கை வெளியிடுதல்
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் தங்களது வாக்கினை 17.04.2025,18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய நாட்களில் அஞ்சல் வாக்கு மையங்களில், அஞ்சல் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம். படிவம் 12D சமர்ப்பித்த வாக்காளர்கள், தேர்தல் நாளான 23.04.2026 அன்று வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:201- இரண்டாம் நிலை தேர்தல் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை சீரற்றமயமாக்கல் (Randomization) – 15.04.2026 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2026மூன்று தொகுதிகளுக்குரிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து வழங்கும் பொருட்டு இரண்டாம் கட்ட சீரற்ற மயமாக்கல் (Second Randomization) பணியானது 15.04.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108- உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதி, 109- கூடலூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும், 110-குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு, குன்னூர் செயின்ட் ஜோசப் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியிலும், 15.04.2026 அன்று நடைபெற உள்ளது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (PDF 155KB)
மேலும் பலசெ.வெ.எண்:200- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி, 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி ஆகிய மூன்று தொகுதியில் உள்ள 5,52,006 வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி 11.04.2026 முதல் தொடங்கி 17.04.2026 அன்று வரை நடைபெறும்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:199- நீலகிரி மாவட்டத்தில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026நீலகிரி மாவட்டத்தில் 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்தவாக்காளர்கள் 1292 வாக்காளர்கள் மற்றும் 1339 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 2631 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்கு செலுத்தி வருகின்றனர்.(PDF 128KB)
மேலும் பலசெ.வெ.எண்:198- மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்குமேற்பட்ட மூத்த குடிமக்களிடம் தபால் ஓட்டு சேகரிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் -2026-ஐ முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்கே (HomeVotingFacility) நேரில் சென்று தபால் ஓட்டு சேகரிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. எனவே, மேற்படி வாக்காளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்துமாறு தேர்தல் நடத்தும் அலுவலர் / சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ.ஆ.ப., அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.(PDF 413KB)
மேலும் பலசெ.வெ.எண்:197- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை முன்னிட்டு நடைபெற்ற மிதிவண்டி பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை முன்னிட்டு, வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற மிதிவண்டி பேரணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 133KB)
மேலும் பலசெ.வெ.எண்:196- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் தபால் வாக்குகள் சேகரிக்கும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்கள்; செல்லும் வாகனத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 45KB)
மேலும் பல