செ.வெ.எண்:289- SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026SSC CGL (Combined Graduate Level) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2444004/7200019666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 233KB )
மேலும் பலசெ.வெ.எண்:288- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026தாட்கோ, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றம் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவிக்கின்றர்கள். (PDF 403KB )
மேலும் பலசெ.வெ.எண்:287- முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். (PDF 56KB )
மேலும் பலசெ.வெ.எண்:286- புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் கடன்
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தொழில் கடன் பெற்று, சுயமாக தொழில் துவங்க திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு. (PDF 59K B)
மேலும் பலசெ.வெ.எண்:285- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ் ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோட்டை கொத்தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. (PDF 59KB )
மேலும் பலசிறுபான்மையினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்)
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. (PDF 63KB )
மேலும் பலகால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026இந்திய அரசாங்கத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய மின்னணு கால்நடை இயக்கம் (National Digital Livestock Mission) மற்றும் தமிழக அரசும் இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கால்நடை வளர்ப்போர்களின் ஆதார் எண், கைபேசி எண் மற்றும் கால்நடை விவரங்கள் போன்ற தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. (PDF 64KB )
மேலும் பலசெ.வெ.எண்:284- உதகை இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடத்திற்கு உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026உதகை இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடத்திற்கு உணவகம் செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்டஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். (PDF 44KB )
மேலும் பலசெ.வெ.எண்:283- அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயன் காசோலைப் புத்தகம் அறிமுகம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026India Post அஞ்சல் சேமிப்பு கணக்கு (POSA) வாடிக்கையாளர்களுக்காக புதிய தனிப்பயன் காசோலைப் புத்தகம் (Personalized Cheque Book – PCB) வசதியை 08.05.2026 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய காசோலைப் புத்தகத்தில் கணக்குதாரரின் பெயர், கணக்கு எண் மற்றும் இந்திய அஞ்சல்துறையின் IFSC குறியீடு முன்கூட்டியே அச்சிடப்பட்டிருக்கும். இதன் மூலம் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கித் தரத்திலான சேவை கிடைக்கும். (PDF 790KB )
மேலும் பலசெ.வெ.எண்:282- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.வில்லியம் கிரஹம் மெக்ஐவர் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026நீலகிரி மாவட்டம், உதகை, புனித ஸ்டீபன் திருத்தலத்தில், தோட்டக்கலைத்துறையின் சார்பில், திரு.வில்லியம் கிரஹம் மெக்ஐவர் அவரது நினைவிடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். (PDF 199KB )
மேலும் பல