மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:278- நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மாணவர்களுக்கு 2026 – 2027 க்கான விடுதி சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

2026–2027 கல்வியாண்டிற்கான நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (MBC) மற்றும் சீர்மரபினர் (DNC) மாணவ, மாணவியர்களுக்கான விடுதி சேர்க்கை. (PDF 58KB )

மேலும் பல

செ.வெ.எண்:277- தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25,000/-லிருந்து ரூ.50,000/-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  (PDF 46KB )

மேலும் பல

செ.வெ.எண்:276 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 05/06/2026

நீலகிரி மாவட்டத்தில் ஜுன்-2026ம் மாதத்தில் 19.06.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 58KB )

மேலும் பல

செ.வெ.எண்:274 – உதகை இளைஞர் விடுதியில் காப்பாளர் மற்றும் கணக்காளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் உதகை இளைஞர் விடுதிக்கு காப்பாளர் மற்றும் கணக்காளர் நியமிப்பதற்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF 71KB )

மேலும் பல

செ.வெ.எண்:273- பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்- ஜூன் -2026

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

பிரதம மந்திரி தேசியத்தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 10 – ஜூன் -2026 தேசியத்தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் தொழில் பழகுநர்க்கான பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.06.2026 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை) நடைபெற உள்ளது. (PDF 69KB )

மேலும் பல

செ.வெ.எண்:272 – முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு Outreach Programme நடைபெறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து முப்படையைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்கள் பயன்பெறும் வகையில் Madras Engineering Group – ஆல் Madras Regiment Centre வெல்லிங்டனில் 06.06.2026 அன்று காலை 9.௦௦ மணி முதல் முன்னாள் படைவீரர்களுக்கான நேரடி சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் (Outreach Programme) நடைபெறவுள்ளது. (PDF 49KB )

மேலும் பல

செ.வெ.எண்:271 – நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஜுன் 2026 மாதத்திற்கு  07.06.2026 மற்றும் 08.06.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 38KB )

மேலும் பல

செ.வெ.எண்:270 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நடைபெற்ற ‘வருவாய் தீர்வாயம்”(ஜமாபந்தி) இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 10 நபர்களுக்கு ரூ. 2.43 இலட்சத்திற்கான ஈமச்சடங்கு மற்றும் தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.  (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:269 – சாந்தி விஜய் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (04.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026

நீலகிரி மாவட்டம் உதகை சாந்தி விஜய் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 34KB )

மேலும் பல

செ.வெ.எண்:268 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/06/2026

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நடைபெற்ற ‘வருவாய் தீர்வாயம்” (ஜமாபந்தி) முதல் நாள் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 119 மனுக்களை இன்று (03.06.2026) பெற்றுக் கொண்டார். (PDF 47KB )

மேலும் பல