மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:382 – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 90.91 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.90.91கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 4 எண்ணிக்கையிலான புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார்கள்.(PDF 202KB)  

மேலும் பல

செ.வெ.எண்.381- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (03.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 126 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 97KB)

மேலும் பல

செ.வெ.எண்:380- நீலகிரி மாவட்டத்தில் வட்டார மற்றும் கிராம அளவில் பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், 2026–27 ஆம் ஆண்டிற்கான அட்மா திட்டத்தின் மூலம், நவீன மற்றும் நிலையான தோட்டக்கலை தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றும் வகையில், வட்டார மற்றும் கிராம அளவில் பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த பயிற்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலாக்கள் நடத்தப்பட உள்ளன. (PDF 73KB)

மேலும் பல

செ.வெ.எண்:378 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 21.08.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 58KB )

மேலும் பல

செ.வெ.எண்:377- வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கு 04.08.2026 மற்றும் 05.08.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ,ப.. அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:376- அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. (PDF 153KB )

மேலும் பல

செ.வெ.எண்:375- தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பழங்குடியினர் சமுதாய அமைப்புகளுக்கு இந்துஸ்தான் பெட்ரோலியம் விற்பனை மையத்தினை நடத்திட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

நீலகிரிமாவட்டம், பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதகை வட்டம் முத்தோரை பாலாடா பகுதியில் பழங்குடியின ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான இடத்தில் உதகை இத்தலார் பிரதான சாலையின் இடது புறத்தில் செயல்பட்டு வரும் ”இந்துஸ்தான் பெட்ரோலியம் விற்பனை மையம்” தற்காலிகஒப்பந்தஅடிப்படையில் பழங்குடியினர் சமுதாய அமைப்புகளுக்கு விற்பனை மையத்தினை நடத்திட கீழ்கண்டவாறு தகுதியுள்ள நபர்களிடமிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. (PDF 173KB )

மேலும் பல

செ.வெ.எண்:374- பழங்குடியினர்களுக்கு வன உரிமைகள் வழங்குவது தொடர்பான குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், கூடலூர் வனக்கோட்டத்திற்குட்பட்ட பழங்குடியினர்களுக்கு வன உரிமைகள் வழங்குவது தொடர்பான குழு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.07.2026) நடைபெற்றது. (PDF 21KB )

மேலும் பல

செ.வெ.எண்:373- 2027 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது. (PDF 49KB )

மேலும் பல

செ.வெ.எண்:372- விவசாய தொழில் முனைவோர் வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ 16 கோடி கடன் இலக்கு

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

வேளாண் உற்பத்தியை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல உள்கட்டமைப்பு வசதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்காக ஒன்றிய அரசு, வேளாண் உள்கட்டமைப்பு நிதியை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ரூ 2 கோடி கடன் 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பயனாளியின் பங்களிப்பு திட்ட மதிப்பீட்டில் 10 சதவிதமாகும். (PDF 51KB )

மேலும் பல