செ.வெ.எண்:424- சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 28.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் (28.08.2026) அன்று காலை 10.00 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. (PDF 179KB)
மேலும் பலசெ.வெ.எண்:423- ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மும்பையில் கள இந்திய ஹஜ் குழுவானது தனது சுற்றறிக்கை எண்.7. நாள்:11.08.2026-ல் ஹஜ் 2027-ல் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் நாட்டைச் சார்ந்த ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்ப. நிகர்நிலை மூலம் (online) விண்ணப்பங்களை வரவேற்கிறது. (PDF 204KB)
மேலும் பலசெ.வெ.எண்:422- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-09-2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026மாநில கணக்காயர், சென்னை அவர்களின் சார்பில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் மன்றக் கூட்டமானது 11-09-2026 அன்று முற்பகல் 10.00 மணியளவில், கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. எனவே ஓய்வூதியர்கள் தங்களது மாநில கணக்காயர் தொடர்புடைய ஓய்வூதியம் அல்லது வருங்கால வைப்புநிதி தொடர்பான கோரிக்கைகளை 28-08-2026 க்குள் கருவூல அலுவலர், நீலகிரி அவர்களுக்கு அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. (PDF 121KB)
மேலும் பலசெ.வெ.எண்:421- நீலகிரி மாவட்டத்தில் மிலாடி நபி- 26.08.2026 தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 26.08.2026 அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF 91KB)
மேலும் பலசெ.வெ.எண்.420- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (24.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 182 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 99KB)
மேலும் பலசெ.வெ.எண்:419- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026நீலகிரி மாவட்ட ஆ ட்சியர் கூடுதல் அலுவலகத்தில்,விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப.இ அவர்கள் தலைமையில் இன்று (21.08.2026) நடைபெற்றது. (PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:418- தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. (PDF 86KB)
மேலும் பலசெ.வெ.எண்:417- தற்காலிக கட்டிடங்களில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் இன்று 20.08.2026.ல் திறந்து வைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026அரசாணை நிலைஎண் 330 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (பரா-2(1) துறை நாள் 27.11.2025ன்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மற்றும் அரசிதழ் எண்.18 நாள் 27.12.2025.ன்படியும் நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் ஊராட்சி ஒன்றியம் – 13 ஊராட்சிகளை 38 ஆக பிரித்து மறுசீரமைப்பு செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து பிரிக்கப்பட்ட புதிய ஊராட்சிகள் தற்காலிக கட்டிடங்களில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் இன்று 20.08.2026.ல் திறந்து வைக்கப்பட்டது. (PDF 418KB)
மேலும் பலசெ.வெ.எண்:416- நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்டரங்கில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் இன்று (20.08.2026) நடைபெற்றது. (PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:415- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.08.2026) வரை நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.08.2026) வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 80KB)
மேலும் பல