செ.வெ.எண்:684- “தொல்குடித் தொடுவானம்” திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையில் சிறப்புதிறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப்பயிற்சி முகாமை நவம்பர் 8 சேலத்தில் நடத்தவுள்ளது. அரசின் முக்கியத்திட்டமான “தொல்குடித்தொடுவானம்” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரிய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(PDF 264KB)
மேலும் பலசெ.வெ.எண்:683- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் இதர துறைகளின் பல்வேறு பணிகள் குறித்தும், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:682- இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை (National Scholarship Portal) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.(PDF 67KB)
மேலும் பலசெ.வெ.எண்:681- பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்- நவம்பர்-2025
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025பிரதம மந்திரி தேசியத்தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 10 – நவம்பர் -2025 தேசியத்தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் தொழில் பழகுநர்க்கான பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.11.2025 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை) நடைபெற உள்ளது.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:679- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நாய்களுக்கான பூங்கா (PET PARK) அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா (PET PARK) அமைக்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:678- கூடலூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 08.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025“நலம் காக்கும் ஸ்டாலின்” 9-வது முகாமானது 08.11.2025 சனிக்கிழமை அன்று கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட GTMO மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 230KB)
மேலும் பலசெ.வெ.எண்:677- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் மதிய உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சி, ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 111KB)
மேலும் பலசெ.வெ.எண்:676- வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவித்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலபவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என்ற தகவலை தெரிவித்துள்ளார்கள்.(PDF 286KB)
மேலும் பலசெ.வெ.எண்:674- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் விதமாக கணக்கீட்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:673- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)
மேலும் பல
