செ.வெ.எண்:605- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான “விடியல் பயணத் திட்டம்”
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை) லிட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான “விடியல் பயணத்திட்டத்தினை”, அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:604- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/10/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 107 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 109KB)
மேலும் பலசெ.வெ.எண்:603- நீலகிரி மாவட்டத்தில் 07.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 06/10/202507.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 17 மற்றும் 18 -ற்கான முகாம் கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்திலும், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 25 மற்றும் 26-ற்கான முகாம் உதகை ஒக்கலிகர கல்யாண மண்டபத்திலும், உதகமண்டலம் வட்டம், கக்குச்சி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் பில்லிகம்பை சமுதாய கூடத்திலும், பந்தலூர் வட்டம், நெலாக்கோட்டை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் மாங்கோடு சென்ட் ஜார்ஜ் ஜாகோபைட் சிரியன் சிம்ஹானாசர்ச் ஹாலிலும் நடைபெறவுள்ளது.(PDF […]
மேலும் பலசெ.வெ.எண்:602- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.10.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர்-2025 மாதத்தில் 17.10.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:601- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025நீலகிரி மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்று திறனாளி குடும்ப அட்டடைதாரர்களின் இல்லத்திற்கு சென்று “தாயுமானவர்” திட்டத்தின்கீழ் நேரடியாக பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அக்டோபர் மாதம் 5, 6 ஆகிய நாட்களில் வழங்கப்பட உள்ளன.(PDF 105KB)
மேலும் பலசெ.வெ.எண்:600- சிறுபான்மையின முஸ்லீம் மாணவர்களுக்கு வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் (2025-2026)
வெளியிடப்பட்ட நாள்: 03/10/2025தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ / மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவர்க்கு தலா ரூ.36 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.(PDF 403KB)
மேலும் பலசெ.வெ.எண்:599- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் மாணவர்களுக்கு கடன் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம். எனவே நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 399KB)
மேலும் பலசெ.வெ.எண்:598- தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025செ.வெ.எண்:597- 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அறிவியலறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் சார்பில் நடைபெற்ற 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அறிவியலறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன்; அவர்கள் 24 அறிவியலறிஞர்களுக்கு விருதுகள், பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார்.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:596- மாண்புமிகு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் அருளகம் பாஸ்டர் சென்டரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2025நீலகிரி மாவட்டத்தில், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 12 மற்றும் 13-ற்காக உதகை அருளகம் பாஸ்டர் சென்டரில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர், கோவி செழியன்; அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 10 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்கள்.(PDF 147KB)
மேலும் பல