செ.வெ.எண்:325- நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 21750 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் NADCP கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெற உள்ளது. (PDF 62KB )
மேலும் பலசெ.வெ.எண்:324- தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 28.07.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 28.07.2026 அன்று காலை 11.00 மணியளவில் நீலகிரி கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் 643001 என்ற முகவரிக்கு 14.07.2026-க்குள் சேர்ப்பிக்கும்படி அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஆர். அசோக்குமார் அவர்கள் இதன் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். (PDF 63KB )
மேலும் பலசெ.வெ.எண்:323 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 17.07.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026நீலகிரி மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் 17.07.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 62KB )
மேலும் பலசெ.வெ.எண்:322- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஜூலை 2026 மாதத்திற்கு 04.07.2026,06.07.2026,08.07.2026,09.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 50KB )
மேலும் பலசெ.வெ.எண்:321- ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB )
மேலும் பலசெ.வெ.எண்:320- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி. (PDF 69KB )
மேலும் பலசெ.வெ.எண்:319- மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடலூர் சுங்கம் எஸ்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த திருமதி.ராதா என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து இறந்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் இன்று (29.06.2026) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 44KB )
மேலும் பலசெ.வெ.எண்:318- போலியோ சொட்டு மருந்து முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று (28.06.2026) குழந்தைகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2026நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் முக்கோணம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் இன்று (28.06.2026) குழந்தைகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 23KB )
மேலும் பலசெ.வெ.எண்:317- போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 114KB )
மேலும் பலசெ.வெ.எண்:316- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் நடமாடும் நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடை மற்றும் ரூ.51 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (25.06.2026) திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 46KB )
மேலும் பல