செ.வெ.எண்:19- அரசு தலைமை கொறடா அவர்கள் உதகை அமுதம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026நீலகிரி மாவட்டத்தில், உதகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமுதம் நியாய விலைக்கடையில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், ரொக்கத்தொகை தலா ரூ.3,000/- மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:18- மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை அட்டை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026மாற்றுத்திறனாளிகள் இலவச பயண சலுகை அட்டை பெற்றுக்கொள்ள 07.01.2026 முதல் 31.01.2026 வரை நாட்களில் அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து ஏனைய பணி நாட்களில் அனைத்து மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் பெறும் வகையில் தாலுக்காவில் உள்ள இசேவை மையங்களிலும் அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கார்டன் சாலை , உதகையில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், சமிபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், பணிக்கு செல்லும் மாற்றுத்திறனாளி பணிச்சான்று கல்வி பயிலும் […]
மேலும் பலசெ.வெ.எண்:17- தைப்பொங்கல்-2026 திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 07/01/20262026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்: 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை ஒரு முழுக்கரும்பு வேட்டி சேலை, ரொக்கத்தொகை ரூ.3,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் […]
மேலும் பலசெ.வெ.எண்:16- ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு 3 பணியாளரை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வழக்கு பணியாளர், (Case Worker) பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.18,000 /-(பதினெட்டாயிரம் மட்டும்) வழங்கப்படும். சமூகபணி, ஆலோசனை உளவியல் அல்லது Law-ல், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.(PDF 225KB)
மேலும் பலசெ.வெ.எண்:15- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை மற்றும் சேரங்கோடு ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில் ரூ.9.44 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:14- திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் குறளாசிரியர் மாநாட்டிற்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோரு ஆண்டும் குறள்வாரம் கொண்டாடப்பட அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு 2026ஆம் ஆண்டு சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள்வார விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:13- நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை விரிவாக்க ஊக்குவிப்புத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க சிறப்புத் திட்டத்தினை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் 50 கோடிநிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த 2023-24ம் நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:12- தைப்பொங்கல்-2026 திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/20262026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்: 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை ஒரு முழுக்கரும்பு வேட்டி சேலை, ரொக்கத்தொகை ரூ.3,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் […]
மேலும் பலசெ.வெ.எண்:11- அரசு தலைமைக்கொறடா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில், நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” எனும் நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், 1,994 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:10- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) /மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 49KB)
மேலும் பல
