செ.வெ.எண்.237- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாவரவியல் பூங்காவில் 128வது மலர்க்காட்சியை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 128வது மலர்க்காட்சியை இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 208KB )
மேலும் பலசெ.வெ.எண்.236- மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க அரசு பள்ளி மாணவர்களுக்கான குடியிருப்பு கோடை முகாம் நிறைவு விழா
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2026நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கான, குடியிருப்பு கோடை முகாம் 27.04.2026 முதல் 16.5.2026 அன்று வரை நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (16.05.2026) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.(PDF 192KB )
மேலும் பலசெ.வெ.எண்.235- உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 முதல் 28.05.2026 வரை நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 அன்று துவங்கப்படவுள்ளது. இக்காட்சி 18.05.2026 முதல் 28.05.2026 வரை நடைபெறவுள்ளது. இவ்வருடம் தோட்டக்கலை துறையினரால் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:234- நீலகிரி மாவட்டத்தில் 128-வது மலர்க்கண்காட்சியினை முன்னிட்டு, 18.05.2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 18.05.2026 (திங்கள்கிழமை) அன்று 128-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட 18.05.2026 விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 06.06.2026 (சனிக்கிழமை) அன்று இம்மாவட்டத்திற்;கு பணி நாளாக இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி […]
மேலும் பலசெ.வெ.எண்.233- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 21-வது உதகை ரோஜா காட்சியினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற 21 வது ரோஜா காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்.232- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026நீலகிரி மாவட்டத்தில் மனித-விலங்கு மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் இன்று (12.05.2026) பிற்பகல் 04.00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்.231- அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி உதகையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி உதகையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது விண்ணப்பங்களை https://www.tnpoly.in/. இந்த இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் நேரடி இரண்டாமாண்டிற்கு – 25.05.2026 முதலாமாண்டிற்கு 30.05.2026.(PDF 209KB)
மேலும் பலசெ.வெ.எண்.230- உதகமண்டலம் அரசு ரோஜா பூங்காவில் ரோஜாகாட்சி வருகின்ற 14.05.2026 (வியாழக்கிழமை) துவங்க இருக்கிறது
வெளியிடப்பட்ட நாள்: 12/05/20262026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக அரசு ரோஜா பூங்கா உதகமண்டலத்தில் ரோஜாகாட்சி வருகின்ற 14.05.2026 (வியாழக்கிழமை) துவங்க இருக்கிறது. இக்காட்சி 5 தினங்கள் (14.05.2026 முதல் 18.05.2026) வரை நடைபெறவிருக்கிறது. இவ்வருடம் தோட்டக்கலைதுறையினரால் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோஜாகாட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 258KB)
மேலும் பலசெ.வெ.எண்.229- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான அரசு மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:228- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.06.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026தமிழ்நாடு அரசின் பல்வேதுறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஓய்வூதிய தாரர்களுக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 12.06.2026 வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. (PDF 205KB)
மேலும் பல