செ.வெ.எண்:153- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 180 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:152- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு இறுதி கட்டப்பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதிகளை கொண்ட உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை 06.04.2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, இறுதி கட்டப்பணிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:151- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:150- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு […]
மேலும் பலசெ.வெ.எண்:149- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 106KB)
மேலும் பலசெ.வெ.எண்:148- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025நீலகிரி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:147- அன்னை சத்யா குழந்தைகள் இல்லக் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கிட, பயிற்சி பெற்ற நபரை நியமித்து குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:146- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயது கடந்தும் முதிர்வுத்தொகை கோரத 122 பயனாளிகளின் பெயர்;பட்டியல் நீலகிரி மாவட்ட இணையதளமான nilgiris.nic.in. என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:145- “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்”
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக பிரத்யேகமாக காக்கும் கரங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய வரை வங்கிக் கடன் பெறலாம்.(PDF 81KB)
மேலும் பலசெ.வெ.எண்:144- தாட்கோ மூலம் இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship Program) வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 58KB)
மேலும் பல