செ.வெ.எண்:466- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 19.09.2026 அன்று சிறப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள POS இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். (PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:465 – பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் -செப்டம்பர் -2026
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர்களுக்கான ‘பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 23.09.2026 – அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெறவுள்ளது. (PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:464 – அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 22.09.2026 வரை நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 22.09.2026 வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிக பட்ச வயது வரம்பு 40 பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:463 – மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் தலைமையில் இன்று (18.09.2026) நடைபெற்றது. (PDF 62KB)
மேலும் பலசெ.வெ.எண்:462 – மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் 40 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பீட்டிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 10.99 கோடி மதிப்பில் முடிவுற்ற 55 புதிய திட்டபணிகளை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் திறந்து வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 57KB)
மேலும் பலசெ.வெ.எண்:461- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடினமாலா, அரக்கோடு, தேனாடு, நெடுகுளா மற்றும் கோடநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 62KB)
மேலும் பலசெ.வெ.எண்:460- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI – Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 70KB)
மேலும் பலசெ.வெ.எண்:459- தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026தீபாவளி பண்டிகை எதிர்வரும் 08.11.2026 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட (http://www.tnesevai.tn.gov.in) இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்களை இ-சேவை மையங்கள்E Sevai மூலம் உரிய ஆவணங்களுடன்10.10.2026-ற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (PDF 153KB)
மேலும் பலசெ.வெ.எண்:458- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் குன்னூர் வட்டம் 16.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (16.09.2026) குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில்,17 பயனாளிகளுக்குரூ.17.77 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 90KB)
மேலும் பலசெ.வெ.எண்:457- சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2026
வெளியிடப்பட்ட நாள்: 16/09/20262026-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது (PDF 404KB)
மேலும் பல