மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:362- குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின் கைரேகையினை நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை நியாயவிலைகடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். வேலை நாட்களில் தாங்கள் பொருள் பெறும் நியாயவிலை கடைக்கு நேரில் சென்று குடும்பத்தில் இதுவரை கைரேகை பதிவு செய்து கொள்ளாதவர்கள் தங்களது கைவிரல் ரே-கையினை பதிவுசெய்து கொள்ளலாம்.  (PDF 52KB )

மேலும் பல

செ.வெ.எண்:361 – பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

செய்தி வெளியீடு பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் பங்குகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது (PDF 69KB )

மேலும் பல

செ.வெ.எண்:360 – மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா அவர்கள் தலைமையில் இன்று 21.07.2026 ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நீலகிரி மாவட்டம் குன்னூர் இண்ட்கோ சர்வ் அலுவலகத்தில், இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 16 தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் டீ சர்வ் ஆகியவற்றின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.பெ.மதன்ராஜா அவர்கள் தலைமையில் இன்று 21.07.2026 நடைபெற்றது. (PDF 24KB )

மேலும் பல

செ.வெ.எண்:359 – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் 261 பயனாளிகளுக்கு ரூ.55.௦௦ இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று (21.07.2026) வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், 261 பயனாளிகளுக்கு ரூ.55.௦௦ இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று (21.07.2026) வழங்கினார். (PDF 24KB )  

மேலும் பல

செ.வெ.எண்.358- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/07/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (20.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 151 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 30KB )

மேலும் பல

செ.வெ.எண்:357- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

நீலகிரி மாவட்ட  ஆ ட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில்  இன்று (17.07.2026) நடைபெற்றது. (PDF 57KB )

மேலும் பல

செ.வெ.எண்:356 – பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதிச்சான்றிதழ் ஆதார் அட்டை, மற்றும் குடும்ப அட்டை இல்லாத நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதிச்சான்றிதழ் ஆதார் அட்டை, மற்றும் குடும்ப அட்டை இல்லாத நபர்களுக்கு 18.07.2026, 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. (PDF 40KB )

மேலும் பல

செ.வெ.எண்:355 – மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027- முதல் கட்டம் – சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) மற்றும் வீடுதோறும் கணக்கெடுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை முப்பது நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இதற்கு முன்பாக, மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளன. (PDF 103KB )

மேலும் பல

செ.வெ.எண்:354 – கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (16.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:353 – “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று (15.07.2026) பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (15.07.2026) பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 45KB )

மேலும் பல