மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:637- முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்- திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025

தமிழ்நாடு அரசின் 2025-26 -ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் “வேளாண்மை பட்டதாரிகளின் படிப்பறிவும், தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் 1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது.(PDF 225KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:636- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மசினகுடி மற்றும் கார்குடி உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம், மசினகுடி மற்றும் கார்குடி உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:635- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 17.10.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 118KB)

மேலும் பல

செ.வெ.எண்:634- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின் “கல்லூரி களப்பயணத்தினை -2025” துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகல்வித்துறை சார்பில், உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின்; “கல்லூரி களப்பயணத்தினை -2025” மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 46KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:633- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2025

வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம் 2025-2026 – 50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் வழங்கும் திட்டம் செயல்படுத்துதல். தீவன விரயத்தைக் குறைப்பதற்காகவும்,  கால்நடைகளின் செறிமான தன்மையை அதிகரித்திடவும் உற்பத்தித்திறனை பெருக்கவும், வேளாண் பட்ஜெட் அறிவிப்பு திட்டம் 2025-2026-ஆம் ஆண்டிற்கு, 50% மானியத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் இயந்திரம் விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தி, நீலகிரி மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறைக்கென […]

மேலும் பல
01

செ.வெ.எண்:632- உதகை அன்பு அறிவு அறக்கட்டளை இல்லம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு “Coffee With Collector” நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டம் உதகை அன்பு அறிவு அறக்கட்டளை இல்லம் ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, Coffee With Collector நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:631- நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் (African Swine Fever) உறுதி செய்யயப்பட்டுள்ளது. எனவே, பன்றி வளர்ப்போர் மற்றும் பண்ணைகள் அமைத்து பன்றிகள் வளர்ப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்நோய் பன்றிகளுக்கு மட்டுமே பரவக்கூடியதால், இதர கால்நடை வளர்ப்போர் அச்சப்பட தேவையில்லை. மேலும் இந்நோய் மனிதர்களுக்கு பரவக்கூடியதும் இல்லை. எனவே பன்றிகள் வளர்க்கும் தனிநபர்கள் மற்றும் பண்ணையாளர்கள் இந்நோய் குறித்து அறிந்து கொள்ளவும், இக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் அறிந்து கொள்ள அருகில் […]

மேலும் பல

செ.வெ.எண்:630- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் பயனடைந்து வரும் குழந்தைகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நிதி ஆதரவு, வளர்ப்பு பராமரிப்பு, பிற்காப்பு பராமரிப்பு, மாண்புமிகு பிரதமரின் கோவிட் 19 நிவாரணநிதி, மாண்புமிகு முதலமைச்சரின் கோவிட் 19 நிவாரண நிதி ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைந்து வரும் குழந்தைகளுடனான கலந்துரையாடல், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 51KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:629- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 13.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 133 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 50KB)

மேலும் பல

செ.வெ.எண்:628- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மற்றும் பழங்குடியினர்களுக்கான வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 இலட்சம் மதிப்பில் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் ரூ.85 இலட்சம் மதிப்பில் பழங்குடியினர்களுக்கான 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என 8 வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல