செ.வெ.எண்:296- 2026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 16/06/20262026 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (PDF 573KB )
மேலும் பலசெ.வெ.எண்:295- “கலைஞர் கைவினைத் திட்டத்தில்” தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு!!!
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026நீலகிரி மாவட்டத்தில் கைவினைக் கலைகள் மற்றும் தொழில்களில் உள்ளோருக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு “கலைஞர் கைவினைத்திட்டம்” மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தகுதியான பொதுமக்கள் இத்திட்டத்தின் மூலம் புதிய தொழில் துவங்கவும், தொழிலை மேம்படுத்தவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள். (PDF 269KB )
மேலும் பலசெ.வெ.எண்:294- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான Computer – Aided Design (CAD). Computer – Aided Manufacturing (CAM) Course and Industrial Automation Course போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. (PDF 416KB )
மேலும் பலசெ.வெ.எண்:293- பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான விருது- 2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைபுரிந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதுகள் சுதந்திர தினவிழாவின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறும் சமூக சேவகருக்கு ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்று வழங்கப்படும். சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000/- ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். எனவே தகுதியான நபர்கள் மற்றும் நிறுவனங்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 19.06.2026-க்குள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. (PDF 393KB )
மேலும் பலசெ.வெ.எண்.292- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (15.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 174 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 110KB )
மேலும் பலசெ.வெ.எண்:291- நிபா வைரஸ் தொற்று நீலகிரி மாவட்ட மக்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026கேரளா மற்றும் பிறமாநிலங்களில் நிபா வைரஸ் தொற்று தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டதில் பொதுமக்களின் நலனைகருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளார்கள். (PDF 145KB )
மேலும் பலசெ.வெ.எண்:290- நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதி மொழி
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2026நீலகிரி மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர் (PDF 174KB )
மேலும் பலசெ.வெ.எண்:289- SSC ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 11/06/2026SSC CGL (Combined Graduate Level) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 0423-2444004/7200019666 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 233KB )
மேலும் பலசெ.வெ.எண்:288- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/06/2026தாட்கோ, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி மற்றும் துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றம் அச்சிடுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவிக்கின்றர்கள். (PDF 403KB )
மேலும் பலசெ.வெ.எண்:287- முதலமைச்சர் மாநில இளைஞர் விருது – 2026
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, ”முதலமைச்சர் மாநில இளைஞர் விருது” ஓவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1,00,000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். (PDF 56KB )
மேலும் பல