செ.வெ.எண்.231- அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி உதகையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி உதகையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டிற்கு மாணாக்கர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது விண்ணப்பங்களை https://www.tnpoly.in/. இந்த இணையதள வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் நேரடி இரண்டாமாண்டிற்கு – 25.05.2026 முதலாமாண்டிற்கு 30.05.2026.(PDF 209KB)
மேலும் பலசெ.வெ.எண்.230- உதகமண்டலம் அரசு ரோஜா பூங்காவில் ரோஜாகாட்சி வருகின்ற 14.05.2026 (வியாழக்கிழமை) துவங்க இருக்கிறது
வெளியிடப்பட்ட நாள்: 12/05/20262026 ஆம் ஆண்டின் முதல் காட்சியாக அரசு ரோஜா பூங்கா உதகமண்டலத்தில் ரோஜாகாட்சி வருகின்ற 14.05.2026 (வியாழக்கிழமை) துவங்க இருக்கிறது. இக்காட்சி 5 தினங்கள் (14.05.2026 முதல் 18.05.2026) வரை நடைபெறவிருக்கிறது. இவ்வருடம் தோட்டக்கலைதுறையினரால் மிக விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரோஜாகாட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள். (PDF 258KB)
மேலும் பலசெ.வெ.எண்.229- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தரமான அரசு மருத்துவ சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:228- ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.06.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026தமிழ்நாடு அரசின் பல்வேதுறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள ஓய்வூதிய தாரர்களுக்கு ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 12.06.2026 வெள்ளிகிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. (PDF 205KB)
மேலும் பலசெ.வெ.எண்.227- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 55 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 106KB)
மேலும் பலசெ.வெ.எண்.226- 11.05.2026 முதல் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும்
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து தற்போது தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதைத் தொடர்ந்து 11.05.2026 முதல் பிரதிவாரம் திங்கள் கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். ஆகவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம் என்ற விபரம் […]
மேலும் பலசெ.வெ.எண்.225- நீலகிரி மாவட்டம் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் மார்ச் 2026
வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026நீலகிரி மாவட்டம் மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் மார்ச் 2026.(PDF 335KB)
மேலும் பலசெ.வெ.எண்.224- வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் வழிகாட்டு நெறிமுறைகள் (PDF 1MB)
மேலும் பலசெ.வெ.எண்.223- வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) – 03.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும்; பணியில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்கள், மேற்பார்வையாளர்கள்; மற்றும் உதவியாளர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், ஆகியோர்; […]
மேலும் பலசெ.வெ.எண்.222- தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 –கடந்த 23.04.2026 அன்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் 108 – உதகமண்டலம், 109 – கூடலூர் (தனி) மற்றும் 110 – குன்னூர் உட்பட 3 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எதிர்வரும் 04.05.2026 அன்று நடைபெறவுள்ளது.(PDF 226KB)
மேலும் பல