செ.வெ.எண்:229 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் மேற்கொண்ட முதல்நிலை சரிபார்க்கும் பணியினை நேரில் பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2024
![P.R.NO. 229 - 0124](https://cdn.s3waas.gov.in/s339461a19e9eddfb385ea76b26521ea48/uploads/2024/04/2024040914.jpg)
நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களை (240 Ballot யூனிட்ஸ்) பெல் நிறுவனத்தின் பொறியாளர்கள் மேற்கொண்ட முதல்நிலை சரிபார்க்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார். (PDF 221KB)