மூடு

செ.வெ.எண்:234 – எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 17.04.2024, 18.04.2024, 19.04.2024 மற்றும் மஹாவீர் ஜெயந்தி (21.04.2024) ஆகிய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2024

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 17.04.2024, 18.04.2024, 19.04.2024 மற்றும் மஹாவீர் ஜெயந்தி (21.04.2024) ஆகிய தினங்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாட்களில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF 38KB)