• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:352- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகாரமையத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025

நீலகிரி மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகாரமையம் (District Hub for Empowerment of Women)-த்தில் உள்ள காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 46KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:351- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (04.07.2025) நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:350- அரசு தலைமை கொறடா அவர்கள் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற திட்டத்தினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025

நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஊராட்சி இளித்தொரை கிராமத்தில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் உழவர் நலத் துறையின் சார்பில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தினை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:349- அரசு தலைமை கொறடா அவர்கள் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட மாடல் ஹவுஸ் பகுதி நகர்ப்புற நல வாழ்வு மையத்தை அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் பார்வையிட்டு, குத்துவிளக்கு ஏற்றினார்.(PDF 44KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:348- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மசினகுடி ஊராட்சியில் முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/07/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி பகுதியில், ரூ.1.16 கோடி மதிப்பில் நடைபெற்று வரும், முடிவுற்ற வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 30KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:347- நீலகிரி மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் பத்திரிக்கை செய்தி

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்திலுள்ள குழந்தைகளுக்கு மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் (Counseling) சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 384KB)

மேலும் பல

செ.வெ.எண்:346- அரசு தலைமை கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 5 இணைகளுக்கான திருமணத்தினை நடத்தி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025

நீலகிரி மாவட்டம் உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 5 இணைகளுக்கான திருமணத்தினை அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் நடத்தி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.(PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:345- நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 50KB)

மேலும் பல

செ.வெ.எண்:343- அரசு தலைமை கொறடா அவர்கள் உதகை அரசு கலைக்கல்லூரியில் புதிதாக சேரும் மாணாக்கர்களுக்கு ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 2025-2026ஆம் ஆண்டு கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி குறித்த அரசின் திட்டங்கள், கல்லூரி சார்ந்த தகவல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையிலான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டத்தினை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 128KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:342- நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பாளர் (OMBUDSPERSON) திரு. பி. திருமலைசாமி, M.A.M.L.I.S.C., நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொது மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் அவருடைய கைபேசி எண் 8925811326, மற்றும் மின்னஞ்சல் முகவரி thenilgirisombudsperson@gmail.com. மூலம் புகார் அளிக்கலாம். (PDF 377KB)

மேலும் பல