மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:588- DGTல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வின் தனித்தேர்வர்களுக்கான முதனிலைத் தேர்வு நவம்பர்-2025

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் DGT (Directorate General of Training)-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 83KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:587- நீலகிரி மாவட்டத்தில் 26.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2025

26.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் வட்டம், மசினகுடி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் மசினகுடி குழந்தை இயேசு தேவாலய மைதானத்தில் நடைபெறவுள்ளது. (PDF 23KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:586- நீலகிரி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 5 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

நீலகிரி வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட 5 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 124KB)

மேலும் பல

செ.வெ.எண்:585- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் வாக்குச்சாவடி மையங்களை மறுசீரமைப்பு செய்வது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 216KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:584- தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலவலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை சொ.ஜோ அருண் சே.ச அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.. அவர்கள் முன்னிலையிலும், நடைபெற்ற அனைத்து துறை அலவலர்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் 103 பயனாளிகளுக்கு ரூ. 9.65 இலட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.(PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:583- நீலகிரி மாவட்டத்தில் 25.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2025

25.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: குந்தா வட்டம், இத்தலார் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கோத்தக்கண்டிமட்டம் சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது. (PDF 51KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:582- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 23.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025

நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மாவட்ட முப்படை வீரர் வாரிய கூட்டம், முன்னாள் படைவீரர் நல மைய கட்டட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 41KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:581- தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 36-க்காக லீனா தொடக்கப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவர் டாக்டர் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், 14 தூய்மைப்பணியாளர்களுக்கு நலவாரிய அடையாளஅட்டைகளை வழங்கினார்.(PDF 62KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:580- நீலகிரி மாவட்டத்தில் 24.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 23/09/2025

24.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: பந்தலூர் வட்டம், சேரங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கொளப்பள்ளி சர்ச்ஹாலிலும், குந்தாவட்டம், குந்தா கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கிண்ணக்கொரை சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:579- நீலகிரி மாவட்டத்தில் வணிகத் துறைக்கான AR/VR பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

வணிகத்துறைக்கான AR/VR பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி. தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வணிகத்துறைக்கான மிகை மெய்மை (Augmented Reality – AR) மற்றும் தோற்ற மெய்மை (Virtual Reality – VR) கருவிகளைப் பற்றிய மூன்று நாள் நேரடி செயல்முறை பயிற்சி பட்டறை நீலகிரி மாவட்டம் CSI பொறியியல் கல்லூரியில் 2025 செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது.(PDF 62KB)

மேலும் பல