மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
01

செ.வெ.எண்:578- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:576- நீலகிரி மாவட்டத்தில் 23.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2025

23.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 36-ற்கான முகாம் லவ்டேல் லீனா தொடக்கப்பள்ளி மைதானத்திலும். கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 8, 9, 10 மற்றும் 16 -ற்கானமுகாம் கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்திலும், நெல்லியாளம் நகராட்சிகுட்பட்ட வார்டு 12, 13, 16, 17 மற்றும் 19-ற்கான முகாம் தேவாலா ஹாலிக்ராஸ் காண்வென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும், கூடலூர் வட்டம், ஸ்ரீமதுரை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் மண்வயல் சமுதாய கூடத்திலும், […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:575- இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2025

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை (National Scholarship Portal) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.(PDF 39KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:574- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 45KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:573- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2025

நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற, மாண்புமிகு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1691 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், பாராட்டு சான்றிதழ்கள்; மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.(PDF 42KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:572- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு வன உரிமை ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 20/09/2025

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் 104 பயனாளிகளுக்கு ரூ.16.44 இலட்சம் மதிப்பில் வன உரிமை ஆவணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.(PDF 212KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:571- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி – 2025 சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டு, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.(PDF 40KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:570- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அதிகரட்டி பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025

நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 36KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:569- நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை இயக்கம் 2.0 திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025

நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தூய்மை இயக்கம் 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் சேகரித்து கழிவு செய்வதற்காக வைக்கப்பட்டுள்ள மின்னியல் கழிவுகளை (E.Waste) மற்றும் இதர பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம்; கழிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.(PDF 48KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:568- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தூனேரி ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/09/2025

நீலகிரி மாவட்டம், தூனேரி ஊராட்சிக்குட்பட்ட அணிக்கொரை கிராமத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 302KB)

மேலும் பல