செ.வெ.எண்:703- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:702- நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே குறும்படத்தின் மூலம் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பட்ட குறும்படத்தினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டனர்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:701- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:700- அரசு தலைமைக்கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள புதிய தோழி விடுதி பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய தோழி விடுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:699- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி லோகநாயகி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 39KB)
மேலும் பலசெ.வெ.எண்:698- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகை நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:697- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:696- கூடலூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 15.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025“நலம் காக்கும் ஸ்டாலின்” 10-வது முகாமானது 15.11.2025 சனிக்கிழமை அன்று கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:695- வனத்துறை சார்பாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் 14.11.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் உதகை கேர்ன்ஹில் பகுதியில் உள்ள வனத்துறையின் பொருள் விளக்க மைய கட்டிடத்தில் 14.11.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட வன அலுவலகம், நீலகிரி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் நடைபெற உள்ளது. (PDF 18KB)
மேலும் பலசெ.வெ.எண்:694- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 39KB)
மேலும் பல
