செ.வெ.எண்:787- சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான கடன் திட்டம் (TAMCO)
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் (TAMCO) மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் விராசாத் (கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.(PDF 58KB)
மேலும் பலசெ.வெ.எண்:786- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் சட்டமன்ற பொது தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் வடிவத்தினை வெளியிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 – ஐ முன்னிட்டு, இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் (Nilgiri Fly Catcher Mascot) வடிவத்தினை வெளியிட்டு, அதற்கு நீலா என்று பெயர் சூட்டி, இளம் வாக்காளர்களுக்கு மஸ்கட்-யினை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 62KB)
மேலும் பலசெ.வெ.எண்:785- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 144 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:784- நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 (Negotiable Instrument Act 1881)-இன் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இதற்கு பதிலாக எதிர்வரும் 24.01.2026 சனிக்கிழமை அன்று இம்மாவட்டத்தில் பணிநாளாகவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் […]
மேலும் பலசெ.வெ.எண்:783- அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. தேதி: 02.01.2026, 03.01.2026 ⏰ நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை இடம்: கோத்தகிரி துணை அஞ்சலகம் ,கோத்தகிரி-643217. கூடலூர் நீலகிரிஸ் துணை அஞ்சலகம், கூடலூர் -643211. அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) பாலிசி வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு […]
மேலும் பலசெ.வெ.எண்:782- அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2025அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. தேதி: 02.01.2026, 03.01.2026 ⏰ நேரம்: காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை இடம்: உதகமண்டலம் தலைமை அஞ்சலகம், உதகமண்டலம் -643001. குன்னூர் தலைமை அஞ்சலகம், குன்னூர் -643101. அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) பாலிசி வைத்திருக்கும் அனைவரும் தேவையான ஆவணங்களுடன் கலந்துகொண்டு […]
மேலும் பலசெ.வெ.எண்:781- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இத்தலார் ஊராட்சியில் முடிவற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2025நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இத்தலார் ஊராட்சியில் ரூ.38 இலட்சம் மதிப்பில் முடிவற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 108KB)
மேலும் பலசெ.வெ.எண்:780- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் குடிநீர் நீரேற்று நிலையத்திற்காக உயர்மின் அழுத்த புதைவடம் (UG Cable) அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2025நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், நீலகிரி மின் பகிர்மான வட்டம் மூலம் உதகை நகராட்சி குடிநீர் நீரேற்று நிலையத்திற்காக ரூ.6.02 கோடி உயர்மின் அழுத்த புதைவடம் (UG Cable) அமைக்கும் பணிகள் பார்சன்வேலி குடிநீர் நீரேற்று நிலையத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.(PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:779- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சறுக்கு விளையாட்டு பூங்காவிற்கான பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2025நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் 2025-2026ன் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சறுக்கு விளையாட்டு பூங்காவிற்கான பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.(PDF 108KB)
மேலும் பலசெ.வெ.எண்:778- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2025தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.42.30 இலட்சம் மதிப்பில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்து பார்வைவிட்டு, வளர்ப்பு செல்லப்பிராணிகள் பதிவு செய்வதற்கான இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.(PDF 220KB)
மேலும் பல
