செ.வெ.எண்:714- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 18/11/2025நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 13,173 பயனாளிகளுக்கு ரூ9.85 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:713- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025நீலகிரி மாவட்டம், உதகை பெத்தலகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில168 மாணவிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.(PDF 100KB)
மேலும் பலசெ.வெ.எண்:712- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 126 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:711- 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
வெளியிடப்பட்ட நாள்: 17/11/2025நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற “72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்,” மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் முன்னிலையில், 574 பயனாளிகளுக்கு 5 கோடியே 83 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 108KB)
மேலும் பலசெ.வெ.எண்:710- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகமண்டலத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 16/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட பெள்ளத்தி கொம்பை பழங்குடியினர் கிராமம், மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, பாலகொலா ஊராட்சி தங்காடு ஆகிய பகுதியில், நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. ,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 24KB)
மேலும் பலசெ.வெ.எண்:709- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சி மற்றும் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கீழ் கோத்தகிரி சோலூர்மட்டம் பொம்மன் எஸ்டேட் தோட்ட தொழிலாளர்களுக்கும், கோத்தகிரி நகராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. ,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
மேலும் பலசெ.வெ.எண்:708- ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவர்களுக்கு மானியம் வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025தமிழ்நாட்டைச் சார்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் பயனடையும் வகையில் ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்ப படிவத்தினை மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும் www.bcmbcmw.tn.gov.in. என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து […]
மேலும் பலசெ.வெ.எண்:707- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு 16.11.2025 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (ITI Level-II) (Computer Based Test) எதிர்வரும் 16.11.2025 அன்று நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டம், கேத்தியில் உள்ள CSI பொறியியல் கல்லூரியில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 100 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:706- அரசு தலைமை கொறடா அவர்கள் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில் அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், உதகை சி.எஸ்.ஐ ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 109 மாணவிகளுக்கு ரூ.5.18 இலட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:705- நீலகிரி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025நீலகிரி மாவட்டத்தில், தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார். (PDF 34KB)
மேலும் பல
