• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:477- நீலகிரி மாவட்டத்தில் 19.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2025

19.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 29 மற்றும் 30-ற்கான முகாம் பெட்போர்டு பாரதியார் மண்டபத்திலும், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்டவார்டு 5, 15 மற்றும் 16-ற்கான முகாம் தேவாங்கர் திருமண மண்டபத்திலும், கோத்தகிரி வட்டம், குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் குஞ்சப்பனை பல்நோக்குகட்டிடத்திலும், உதகமண்டலம் வட்டம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் தாவனெ சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 41KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:476- நீலகிரி மாவட்ட பழங்குடியின மக்களின் நீலகிரி வேர் திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 16/08/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்திய நீலகிரி பழங்குடியின மக்களின் நீலகிரி வேர் திருவிழாவினை முன்னிட்டு, பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.(PDF 41KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:475- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முத்தோரை பாலாடா கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025

நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 15 பயனாளிகளுக்கு ரூ.17.65 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 52KB)  

மேலும் பல
01

செ.வெ.எண்:474- 79வது சுதந்திர தின விழா

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.(PDF 54KB)

மேலும் பல

செ.வெ.எண்:473- உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 15/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.(PDF 103KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:472- நீலகிரி மாவட்டத்தில் இரண்டாம் கட்ட “உங்களுடன் ஸ்டாலின்” திட்டமுகாம் எதிர்வரும் 19.08.2025 முதல் 12.09.2025 வரை நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

இரண்டாம் கட்ட“உங்களுடன் ஸ்டாலின்”; திட்டமுகாம் எதிர்வரும் 19.08.2025 முதல் 12.09.2025 வரை உதகமண்டலம், குந்தா, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள்,பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் வாரியாக முகாம்கள் நடைபெறவுள்ளது.(PDF 65KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:471- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 3, 4, 6 மற்றும் 14-ற்க்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம், ஸ்ரீனிவாசா பெருமாள் திருமணமண்டபத்தில் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 48KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:470- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பீ.மணியட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற பசுமை பள்ளி பாட வகுப்பினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், பீ மணியட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பசுமை பள்ளி பாட வகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 43KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:469- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகமண்டலம் நகர்புற வாழ்வாதார மையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் உதகமண்டலம் நகர்புற வாழ்வாதார மையத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 45KB)  

மேலும் பல
01

செ.வெ.எண்:467- மாநில தகவல் ஆணையர்கள் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025

நீலகிரி மாவட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-யின் கீழ், மாநில தகவல் ஆணையர்கள் திரு. ஆர்.பிரியகுமார் அவர்கள், திரு.வி.பி.இளம்பரிதி அவர்கள், திரு.எம்.நடேசன் அவர்கள் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், அனைத்து துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.(PDF 42KB)

மேலும் பல