மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
01

செ.வெ.எண்:09- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 115 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 49KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:08- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2026

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; நேரில் பார்வையிட்டார்.(PDF 110KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:07- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2026

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான முழு நீள கரும்பின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 98KB)

மேலும் பல
002

செ.வெ.எண்:06- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/01/2026

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டார்.(PDF 110KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:05- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கூடத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜக்கனாரை ஊராட்சி பனகுடி கிராமத்தில் டி.வி.எஸ் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில், ரூ.8.21 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட சமுதாய கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 44KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:04- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாகவும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 46KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:03- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் வட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:02- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஜனவரி 2026 மாதத்திற்கு 04.01.2026 மற்றும் 05.01.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவய்h தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 236KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:01- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 01/01/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, சிறப்பு தீவிரத் திருத்தம், 2026- ஆனது கடந்த 04.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 736 வாக்குச்சாவடி மையங்களில் 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:804- நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 31/12/2025

நீலகிரி மாவட்ட எல்லை மாநிலமான கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.(PDF 31KB)

மேலும் பல