மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:97- மாவட்ட ஆட்சித்தலைவர் 128வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2026 மே மாதம் நடைபெறவுள்ள 128-வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:96- இந்திய இரயில்வே தேர்வு வாரியத்தால் தொகுதி ஈ பிரிவில் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2026

இந்திய இரயில்வே தேர்வு வாரியத்தால் தொகுதி ஈ பிரிவில் அடங்கிய 22195 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயதிற்குட்பட்ட பொது பிரிவினரும், 18 முதல் 38 வயதிற்குட்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலின வகுப்பினரும், 18 முதல் 36 வயதினருக்குட்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினரும், www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் 02.03.2026 க்குள் விண்ணப்பிக்கலாம்.(PDF 50KB)  

மேலும் பல

செ.வெ.எண்:95- அரசு தலைமை கொறடா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புகையில்லா அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2026

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 16 புதிய BS6 (புகையில்லா) அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 59KB)

மேலும் பல

செ.வெ.எண்:94- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நர்த்தகிரி திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் 400 பயனாளிகளுக்கு ரூ.4.92 இலட்சம் மதிப்பில் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 205KB)

மேலும் பல

செ.வெ.எண்:93- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 100 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மஞ்சள்கயிறு, குங்குமம், சந்தனம், வளையல், புடவை, இனிப்பு உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் உணவினை வழங்கி, அவர்களுடன் உணவு உட்கொண்டார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:92- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையினையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முடிவுற்ற பணியினை திறந்து வைத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.(PDF 52KB)

மேலும் பல

செ.வெ.எண்:91- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாக்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா இணைய பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், 440 பயனாளிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாக்களை வழங்கினார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:90- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஓய்வு பெற்ற டான்டீ தோட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய தொகையினை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர்; தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற டான்டீ தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், ரூ.35.42 கோடி மதிப்பில் பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய தொகையினை வழங்கினார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:89- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிமற்றம் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program)  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 41KB)

மேலும் பல

செ.வெ.எண்:88- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான சுற்றுலா வளர்ச்சிக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)

மேலும் பல