மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:135- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

நீலகிரி மாவட்டத்தில், உலக வன உயிரின தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 7 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதிற்கான சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:134- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புனரமைக்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.17 இலட்சம் மதிப்பில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.(PDF 41KB)

மேலும் பல

செ.வெ.எண்:133- அரசு தலைமைக்கொறடா அவர்கள் பட்டு உலகம் பொழுது போக்கு பூங்காவினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஸ்பிரிங்பீல்டு பகுதியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் ரூ.75 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பட்டு உலகம் பொழுது போக்கு பூங்காவினை, அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 55KB)

மேலும் பல

செ.வெ.எண்:132- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16.03.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக்  கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.03.2026 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 16.03.2026 அன்று 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக, அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் ” […]

மேலும் பல

செ.வெ.எண்:131- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

நீலகிரி மாவட்டத்தில், கோடை காலத்தில் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று (02.03.2026) நடைபெற்றது.(PDF 57KB)

மேலும் பல

செ.வெ.எண்:130- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

நீலகிரி மாவட்டம் உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன், மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 55KB)

மேலும் பல

செ.வெ.எண்:129- மாவட்ட தேர்தல் அலுவலர் கோத்தகிரி வட்டம் மற்றும் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சி மற்றும் கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 41KB)

மேலும் பல

செ.வெ.எண்:128- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 01/03/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தின் அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 111KB)  

மேலும் பல

செ.வெ.எண்:127- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் மார்ச் 2026 மாதத்திற்கு  02.03.2026 மற்றும் 03.03.2026ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 37KB)

மேலும் பல

செ.வெ.எண்:126- கூடுதல் முதன்மை செயலர் அவர்கள் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் வலியில்லா நீலகிரி (Pain Free Nilgiris) திட்டத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/02/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வலியில்லா நீலகிரி (Pain Free Nilgiris) திட்டத்தினை, கூடுதல் முதன்மை செயலர் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை) திரு.பி.செந்தில்குமார் இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு குழும இயக்குநர், தேசிய சுகாதார குழுமம் மரு.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் (காணொலி காட்சி வாயிலாக) முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 61KB)

மேலும் பல