மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:101- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 54KB)

மேலும் பல

செ.வெ.எண்:100- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் உழவர் சங்கத்திற்கு வேளாண் இயந்திரங்களின் சாவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோவை இணைந்து, “தொல்குடி ஐந்திணை” பழங்குடியினர் வாழ்வாதார திட்டத்தின் கீழ், மசினகுடி பூதநத்தம் பூர்வமலை பழங்குடியினர் உழவர் சங்கத்திற்கு, ரூ.50 இலட்சம் மதிப்பில் (ரூ.45 இலட்சம் மானியம்) வேளாண் இயந்திரங்களுக்கான சாவிகள் மற்றும் கூடாரம் அமைப்பதற்கான ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:99- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “பத்மஸ்ரீ” விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின் மனைவிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் ஜக்கனாரை கிராமம் வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த காலம் சென்ற “பத்மஸ்ரீ” விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின்; மனைவி திருமதி சுசீலாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், எம்.பாலாடா ஏகலைவா மாதிரி பள்ளியில் நிரந்தர தோட்டப்பணியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.(PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:98- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 235 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:97- மாவட்ட ஆட்சித்தலைவர் 128வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2026 மே மாதம் நடைபெறவுள்ள 128-வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:96- இந்திய இரயில்வே தேர்வு வாரியத்தால் தொகுதி ஈ பிரிவில் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2026

இந்திய இரயில்வே தேர்வு வாரியத்தால் தொகுதி ஈ பிரிவில் அடங்கிய 22195 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 33 வயதிற்குட்பட்ட பொது பிரிவினரும், 18 முதல் 38 வயதிற்குட்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலின வகுப்பினரும், 18 முதல் 36 வயதினருக்குட்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினரும், www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் 02.03.2026 க்குள் விண்ணப்பிக்கலாம்.(PDF 50KB)  

மேலும் பல

செ.வெ.எண்:95- அரசு தலைமை கொறடா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புகையில்லா அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 15/02/2026

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 16 புதிய BS6 (புகையில்லா) அரசு பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 59KB)

மேலும் பல

செ.வெ.எண்:94- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் நர்த்தகிரி திருமண மண்டபத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் 400 பயனாளிகளுக்கு ரூ.4.92 இலட்சம் மதிப்பில் ஓய்வூதிய தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.(PDF 205KB)

மேலும் பல

செ.வெ.எண்:93- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 100 கர்ப்பிணி பெண்களுக்கு மாலை, பழவகைகள், வெற்றிலை பாக்கு, மஞ்சள்கயிறு, குங்குமம், சந்தனம், வளையல், புடவை, இனிப்பு உள்ளிட்ட 9 வகையான சீர்வரிசை பொருட்கள் மற்றும் உணவினை வழங்கி, அவர்களுடன் உணவு உட்கொண்டார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:92- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகையினையும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் முடிவுற்ற பணியினை திறந்து வைத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில், முதுநிலை ஆசிரியர் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.(PDF 52KB)

மேலும் பல