மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:60- தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 2024

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2025

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் 03.09.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பாற்றியவர்களுக்காக “பசுமை சாம்பியன் விருது” என்ற விருதினை 2021-2022 ஆண்டிலிருந்து ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பரிசுத்தொகையினை வழங்கி வருகின்றது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது. (PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:59- மினிபேருந்திற்கான புதிய விரிவான திட்டம்-2024

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024-ன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் மேற்காணும் நிபந்தனைகளுக்குட்பட்டு வரவேற்கப்படுகின்றன எனவும், பொதுமக்கள் உதகை வட்டாரப்போக்குவரத்து அலுவலரிடம் உடனடியாக விண்ணப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.இ அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 23KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:58- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

நீலகிரி மாவட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் உதகை அரசு கலைக்கல்லூரி இணைந்து நடத்திய தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 21KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:57- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி-2025-ம் மாதத்தில் 21.02.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்;; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 25KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:56- “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 78-வது சுதந்திர தினத்தன்று (15-08-2024) முன்னாள் படைவீரர் நலனுக்காக “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.  எனவே,நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள்ஃ இராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரர்களின் கைம்பெண்கள் 10.02.2025-க்குள் உதகமணடலம். கூட்செட் சாலையில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:55 – 2025 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.(PDF 58KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:54- பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை (PM YASASVI PostMatric Scholarship) திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2025

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர் (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ) மற்றும் சீர்மரபினர் (சீ.ம) மாணவ / மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Post Matric Scholarship) திட்டம் . (PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:53- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.02.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 131 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 36KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:52- உதகை இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடத்திற்கு உணவகம் அமைத்திட விண்ணப்பங்கள் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025

உதகை இளைஞர் விடுதியில் ஒப்பந்த அடிப்படையில் ஒருவருடத்திற்கு உணவகம் செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்டஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.(PDF 35KB)

மேலும் பல

செ.வெ.எண்:51- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2025

நீலகிரி மாவட்டத்தில், அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 41KB)

மேலும் பல