மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:68- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2026

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, செஷயர் ஹோம்ஸ்,அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகீருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 103KB)

மேலும் பல

செ.வெ.எண்:67- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:66- நீலகிரி மாவட்டத்தில் மனித நேய வாரவிழா நிறைவு விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “மனித நேய வாரவிழா நிறைவு விழா”வில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 53KB)  

மேலும் பல

செ.வெ.எண்:65- தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர்.(PDF 45KB)

மேலும் பல

செ.வெ.எண்:64- வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்டத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 40KB)

மேலும் பல

செ.வெ.எண்:63- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் பிப்ரவரி  2026 மாதத்திற்கு  02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 29KB)

மேலும் பல

செ.வெ.எண்:62- முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 03.02.2026 (செவ்வாய் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.(PDF 51KB)

மேலும் பல

செ.வெ.எண்:61- நீலகிரி மாவட்டத்தில் வடலூர் இராமலிங்கனார் நினைவு (01.02.2026) தினத்தில் மதுக் கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 37KB)

மேலும் பல

செ.வெ.எண்:60- கால்நடை வளர்ப்புத்துறையின் செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

கால்நடை வளர்ப்புத்துறையின் செய்தி வெளியீடு.(PDF 39KB)

மேலும் பல

செ.வெ.எண்:59- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆவின் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026

நீலகிரி மாவட்டத்தில், ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)

மேலும் பல