மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:72- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலானது எதிர்வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலத்தில் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மேற்படி விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலானது எதிர்வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 21KB)

மேலும் பல

செ.வெ.எண்:71- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 03.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026

நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40KB)

மேலும் பல

செ.வெ.எண்:70- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 190 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)

மேலும் பல

செ.வெ.எண்:69- வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

நீலகிரி மாவட்டம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை நீலகிரி அலகில் பொது விநியோக திட்ட அரிசியை வாகனம் எண் KL 13H 1959 MARUTHI OMNI ல் கடத்தி சென்ற போது 28.02.2014 அன்று 45 கிலோ எடை கொண்ட 12 மூட்டைகள் வீதம் 540 கிலோ பொது விநியோக திட்ட அரிசி கைப்பற்றப்பட்டது. நாளது வரை இவ்வாகனத்தின் உரிமையாளர் விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த வாகனத்தை பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட […]

மேலும் பல

செ.வெ.எண்:68- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 01/02/2026

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாற்றுதிறனாளிகள் நலத்துறை, செஷயர் ஹோம்ஸ்,அரவிந்த் கண் மருத்துவமனை, பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகீருஷ்ணா மருத்துவமனை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 103KB)

மேலும் பல

செ.வெ.எண்:67- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கத்தொகையினை வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:66- நீலகிரி மாவட்டத்தில் மனித நேய வாரவிழா நிறைவு விழா நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற “மனித நேய வாரவிழா நிறைவு விழா”வில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.(PDF 53KB)  

மேலும் பல

செ.வெ.எண்:65- தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர்.(PDF 45KB)

மேலும் பல

செ.வெ.எண்:64- வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 30/01/2026

நீலகிரி மாவட்டத்தில், வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 40KB)

மேலும் பல

செ.வெ.எண்:63- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் பிப்ரவரி  2026 மாதத்திற்கு  02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 29KB)

மேலும் பல