செ.வெ.எண்:139- மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மலர் மற்றும் பழக்காட்சி குழு துணைத்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 112KB)
மேலும் பலசெ.வெ.எண்:138- “சில்லஹல்லா நீரேற்று புனல்மின்திட்டம் நிலை-I” ற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், குந்தா கிராமத்தில் அமையவிருக்கும் “சில்லஹல்லா நீரேற்று புனல்மின்திட்டம் நிலை-I” ற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006 இன்படி பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 20.03.2025 காலை 11.00 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அன்றைய தின கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:137- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 171 மனுக்களை பெற்றுக் கொணடார். (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:136- மாவட்ட ஆட்சித்தலைவர் 127வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:135- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியில், அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:134- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 19.03.2025 அன்று குந்தா வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025இதனை முன்னிட்டு மார்ச் மாதம் எதிர் வரும் 19.03.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது குந்தா வட்டத்தில், நடைபெற உள்ளது.(PDF 205KB)
மேலும் பலசெ.வெ.எண்:133- மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு (District Monitoring Unit) உருவாக்கப்படவுள்ளது. மேற்படி அலகில் இளம் வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 408KB)
மேலும் பலசெ.வெ.எண்:132- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025நீலகிரி மாவட்டம், கூக்கல் மற்றும் கோடநாடு ஊராட்சி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியினர் கிராமத்தில், உள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:131- கேத்தி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 12.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாந்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 56 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:130- தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான(OET) பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். (PDF 40KB)
மேலும் பல