மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
01

செ.வெ.எண்:779- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் சறுக்கு விளையாட்டு பூங்காவிற்கான பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2025

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டம் 2025-2026ன் கீழ் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் சறுக்கு விளையாட்டு பூங்காவிற்கான பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், தொடங்கி வைத்தார்.(PDF 108KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:778- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 21/12/2025

தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.42.30 இலட்சம் மதிப்பில் வளர்ப்பு நாய்களுக்கான விளையாட்டு பூங்காவினை (PET PARK) நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் திறந்து வைத்து பார்வைவிட்டு, வளர்ப்பு செல்லப்பிராணிகள் பதிவு செய்வதற்கான இணையதளத்தினை தொடங்கி வைத்தார்.(PDF 220KB)  

மேலும் பல
01

செ.வெ.எண்:777- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், 181பயனாளிகளுக்கு ரூ.82.25 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:776- மின்கம்பியாளர் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மின்கம்பியாளர் உதவியாளர் தகுதிகாண் தேர்வானது (Wireman Helper Competency Examination) டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. எனவே, இம்மாவட்டத்தில் இயங்கி வரும் குன்னூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பத்துள்ள தேர்வர்களுக்கு தேர்வு நாள் மாற்றம் செய்யப்பட்ட விவரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.(PDF 515KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:775- தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 06.01.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 06.01.2026 அன்று காலை 10.30 மணியளவில் நீலகிரி கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் 643001 என்ற முகவரிக்கு 02.01.2026 -க்குள் சேர்ப்பிக்கும்படி அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் ஜி. ஆர். அசோக்குமார் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது (PDF 453KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

நீலகிரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

நீலகிரி அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது. Cardiac Cath Technician (03 பணியிடம்)தகுதி: Diploma in Cath Technologyமுன்அனுபவம் – 1 Year Experience B.Sc. Cardiac Technology (02பணியிடம்)தகுதி: BSc in Cardiac Technologyமுன்அனுபவம் -1 Year Experience Quality Manager (01 பணியிடம்)தகுதி: Master’s degree in Hospital Administration / Health Management / Master of Public Healthமுன்அனுபவம் – 2 Years Experience […]

மேலும் பல
01

செ.வெ.எண்:774- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தனியார் துறை வேலைவாய்ப்பில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழாவில், கலந்து கொண்டு தேர்வு பெற்ற 502 நபர்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கி பாராட்டினார்.(PDF 37KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:773- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு வனப்படை நவீனமாக்குதல் திட்டத்தின் கீழ் ரூ. 6 கோடி செலவில் ஜீன்பூல் மரபியல் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை திரு.சுப்ரியாசாஹ_ இ.ஆ.ப., அவர்களின் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 57KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:771- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.(PDF 48KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:770- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/12/2025

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் கீழ், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிகள் முன்னிலையில் வெளியிட்டார்.(PDF 46KB)

மேலும் பல