செ.வெ.எண்:431- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 01/08/2025தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை 2024-2026 ஆம் ஆண்டிற்கான பொது கணக்கு குழுவின் தலைவர் திரு.கு.செல்வபெருந்தகை (ஸ்ரீ பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி) அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டிற்காக நான்கு மாதத்திற்குள் ரூ.27.50 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வசதி செய்து தரப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:430- அரசு தலைமை கொறாடா அவர்கள் பர்லியார் ஊராட்சியில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட காட்டேரி அரசு விதைப்பண்ணையில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:429- நீலகிரி மாவட்டத்தில் 01.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/202501.08.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 17,18 மற்றும் 19-ற்கான முகாம் குன்னூர் ஜான் சர்ச் வளாகத்திலும். குந்தாவட்டம், பிக்கட்டி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல்15-ற்கான முகாம் பிக்கட்டி உயர்நிலைப்பள்ளியிலும் நடைபெறவுள்ளது. (PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:428- நீலகிரி மாவட்டத்தில் Single Window Portal -ல் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் கட்ட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் கட்ட அனுமதி கோரும் பொதுமக்கள் www.onlineppath.gov.in. என்ற இணையதளம் வாயிலாக Single Window Portal -ல் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக ஏற்படும் சந்தேகம், விபரங்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள Helpline No. 9442772701 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டும் (அ) இதே எண்ணிற்கு Whatsapp மூலமாகவும் விவரம் அனுப்பி தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும் அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு […]
மேலும் பலசெ.வெ.எண்:427- இந்திய அஞ்சல் துறையில் விற்பனை நிலையங்களைத் திறக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 31/07/2025இந்திய அஞ்சல் துறை சேவைகளில் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் வகையில், புதுப்பிக்கப்பட்ட உரிமையாளர் திட்டத்தின் கீழ், விற்பனை நிலையங்களைத் திறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.எனவே விற்பனை நிலையங்களைத் திறக்க ஆர்வமுள்ள தனிநபர்கள் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 86KB)
மேலும் பலசெ.வெ.எண்:426- நீலகிரி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின், உதகமண்டலம் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் இனசுழற்சி-பழங்குடியினர் (முன்னுரிமையற்றோர்) (ST- General Non priority) பணியிடத்திற்கு நீலகிரி மாவட்டத்தை சார்ந்த மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 37KB)
மேலும் பலசெ.வெ.எண்:425- அஞ்சலக மென்பொருள் தரம் உயர்த்தப்பட உள்ளதால் 02.08.2025 [சனிக்கிழமை] அன்று “பரிவர்த்தனை இல்லா நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025இந்திய அஞ்சல் துறையின் மென்பொருள் 04 ஆகஸ்ட் 2025 [திங்கட்கிழமை] முதல், தரம் உயர்த்தப்பட இருக்கின்றது. இந்த புதிய தரம் உயர்தப்பட்ட மென்பொருளில் QR மூலம் பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. புதிய பென்மொருள் பயன்பாடு எந்த வித சிரமும் இன்றி செயல்படுத்த 02.08.2025 [சனிக்கிழமை] அன்று “பரிவர்த்தனை இல்லா நாளாக” அறிவிக்கப்பட்டுள்ளது.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:424- அரசு தலைமை கொறாடா அவர்கள் கோத்தகிரி நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வெஸ்ட்புரூக் பகுதியில் நடைபெற்று வரும் ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:423- விநாயகர் சிலைகளை நீர்நிலைகளின் கரைப்பதற்கான வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/2025நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வழிகாட்டுதல்கள் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:422- நீலகிரி மாவட்டத்தில் 31.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 30/07/202531.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 15 மற்றும் 16-ற்கான முகாம் பெட்போர்டு, பாரதியார் மண்டபத்திலும், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு 10 மற்றும் 18-ற்கான முகாம் நிவாரணமையம், காந்தி மைதானத்திலும், கோத்தகிரி வட்டம், ஜெகதளா பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1,2,3,4,13,14 மற்றும் 15-ற்கான முகாம் பெட்டட்டி சமுதாய கூடத்திலும், குன்னூர் வட்டம், பர்லியார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிக்களுக்கான முகாம் காட்டேரி அரசு விதைப்பண்ணையிலும், கோத்தகிரி வட்டம், தேனாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிக்களுக்கான முகாம் கக்குளா […]
மேலும் பல