செ.வெ.எண்:646- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார்நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 19/10/2025நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடையவேண்டாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 289KB)
மேலும் பலசெ.வெ.எண்:645- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2025நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:644- பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து குழந்தைகள் தினந்தோறும் பயனடைந்து வருகின்றனர்
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் பள்ளி குழந்தைகளின் வருகையை ஊக்குவிக்கும் வகையிலும் இடைநிற்றலை குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் மூலம் ரூ.41.33 இலட்சம் மதிப்பில் நீலகிரி மாவட்டத்தில் குஞ்சப்பனை, பொக்காபுரம் மற்றும் கார்குடி பகுதியில் இயங்கும் மூன்று 3 பழங்குடியின உண்டு உறைவிட பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளி வாகனத்தில் குஞ்சப்பனை பள்ளிக்கு 25 மாணாக்கர்களும், பொக்காபுரம் பள்ளிக்கு 27 மாணாக்கர்களும் மற்றும் கார்குடி பள்ளிக்கு 64 மாணாக்கர்களும் என […]
மேலும் பலசெ.வெ.எண்:643- விபத்து ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை -2025 கொண்டாடுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர் காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள் வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள […]
மேலும் பலசெ.வெ.எண்:642- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்விற்கு முழு மாதிரித்தேர்வுகள் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 16/10/2025விண்ணப்பித்த நபர்கள் பயன்பெறக்கூடிய வகையில் காவல்துறை சார்பு ஆய்வாளர் பாடத்திட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவில் 22.10.2025, 29.10.2025, 05.11.2025, 12.11.2025, 19.11.2025, 26.11.2025, 03.12.2025, 10.12.2025 மற்றும் 17.12.2025 ஆகிய தேதிகளில் முழு மாதிரித்தேர்வுகள் மட்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சார்பு ஆய்வாளர் பணியிடத்திற்க்கான போட்டித்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள், இம்முழு மாதிரித்தேர்வினை பயன்படுத்தி தங்களை தயார் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விருப்பமும் , தகுதியும் உள்ள நபர்கள் 0423-2444004 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது 7200019666 என்ற […]
மேலும் பலசெ.வெ.எண்:641- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நெல்லியாளம் நகராட்சி பழங்குடியினர் வசிக்கும் பகுதியின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பன்னிக்கொல்லி பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று அடிப்படை வசதிகளை பார்வையிட்டு, கோரிக்கைகளை கேட்டறிந்தார்.(PDF 107KB)
மேலும் பலசெ.வெ.எண்:640- தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு காரவகைகளை சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகை நாட்களில் மக்களின் அன்றாட தேவைகளில் அவசியமானதாக விளங்கும் இனிப்பு, காரவகை உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பினை உணவு வணிகர்கள் உறுதி செய்திட வேண்டும். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.(PDF 230KB)
மேலும் பலசெ.வெ.எண்:639- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நவீன மயமாக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில், நவீன மயமாக்கப்பட்ட ஆவின் பாலகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:638- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 268 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கும் அடையாளமாக 54 தூய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.1,000/- வழங்கினார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:637- முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்- திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2025தமிழ்நாடு அரசின் 2025-26 -ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் “வேளாண்மை பட்டதாரிகளின் படிப்பறிவும், தொழில்நுட்பத்திறனும் உழவர்களுக்கு உதவியாக இருந்து வேளாண்மை செழித்திட உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் 1000 முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும்” என்று அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் உழவர் நல சேவை மையங்கள் அமைக்க இலக்கு பெறப்பட்டுள்ளது.(PDF 225KB)
மேலும் பல