மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:266- நீலகிரி மாவட்டத்தில் “உழவரைத் தேடி வேளாண்மை” திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2025

“உழவரைத் தேடி வேளாண்மை” திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வரும் 29.05.2025 அன்று திருவாரூர் மாவட்டத்தில் துவக்கி வைக்க உள்ளார்கள். அதனைத்தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டாரங்களில் உள்ள 8 வருவாய் கிராமங்களில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.(PDF 220KB)

மேலும் பல
05

செ.வெ.எண்:265- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் பெம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதியை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2025

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழையினால் குந்தா வட்டத்திற்குட்பட்ட இத்தலார் – பெம்பட்டி சாலையில் ஏற்பட்ட மண்சரிவு பகுதியில், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:264- கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 30KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:263- நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவிருந்த வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மழையின் காரணமாக நாட்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

நீலகிரி மாவட்டத்தில் பசலி 1434-க்கான வருவாய் தீர்வாயம் ஏற்கனவே 28.05.2025 முதல் 30.05.2025 வரை நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்ட நாட்கள் மாற்றம் செய்து 09.06.2025 முதல் 11.06.2025 வரை வருவாய் தீர்வாயம் நடத்தப்பட உள்ளது. (PDF 143KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:262- நீலகிரி மாவட்ட அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் காலிப் பணியிடத்திற்கு தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

நீலகிரி மாவட்டம், அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடத்திற்கு 19500-71900 (Level-8) ஊதிய ஏற்ற முறையிலான ஒரு தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளார்.(PDF 95KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:261- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தற்காலிக அரசு கலைக்கல்லூரியை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, நீலகிரி மாவட்டம், குன்னூரில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில், தற்காலிகமாக அமைகப்பட்டுள்ள அரசு கலைக்கல்லூரியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்தார்.(PDF 21KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:260- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 40 நபர்களுக்கு சுழற்கோப்பைகளும், 233 நபர்களுக்கு முதல் பரிசுகளையும், 186 நபர்களுக்கு இரண்டாம் பரிசுகளையும் மற்றும் 76 நபர்களுக்கு மூன்றாம் பரிசுகளையும் வழங்கினார்.(PDF 38KB)  

மேலும் பல
04

செ.வெ.எண்:259- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் கனமழை காரணமாக மரம் விழுந்து உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2025

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்து கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி செல்வன் ஆதிதேவ் என்பவர் எதிர்பாரா விதமாக உயிரிழந்ததை தொடர்ந்து, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், உயிரிழந்த சுற்றுலாப் பயணியின் உடலுக்கு மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினார்.(PDF 30KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:258- கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 25/05/2025

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்களை கண்காணிப்பு அலுவலர் ஃ துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:257- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025

செ.வெ.எண்:257- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல