மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மூன்றாம் சுற்று “கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்”

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் 15.02.2024 முதல் 15.03.2024 வரை மூன்றாம் சுற்று “கன்று வீச்சு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம்” நடைப்பெற உள்ளது.

15/02/2024 15/03/2024 பார்க்க (40 KB)
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற அறிய வாய்ப்பு

நீலகிரி மாவட்ட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் பெற 22.02.2024 வியாழக்கிழமை கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் 23.02.2024 வெள்ளிகிழமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கார்டன் சாலை உதகையிலும் மற்றும் 27.02.2024 செவ்வாய்கிழமை குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

22/02/2024 27/02/2024 பார்க்க (28 KB)
முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கான சிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 26.02.2024 (திங்கள் கிழமை) அன்றுகாலை 11.00 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படவுள்ளது.

26/02/2024 26/02/2024 பார்க்க (32 KB)
உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது’ ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நமது நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டமானது நான்கு வட்டாரங்களில் 35 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யவும் முகாம் வருகின்ற 17-02-2024 சனிக்கிழமை அன்று மாவட்ட மேலாண்மை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராக புத்தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.

17/02/2024 17/02/2024 பார்க்க (43 KB)
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2024-ம் மாதத்தில் 16.02.2024 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

16/02/2024 16/02/2024 பார்க்க (37 KB)
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தால் 16.02.2024 அன்று உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

16/02/2024 16/02/2024 பார்க்க (109 KB)
அகில இந்திய துணை தொழிற் தேர்வு, மார்ச் 2024

கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2017-2019-ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாத மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (for Semester System only) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

05/02/2024 15/02/2024 பார்க்க (30 KB)
கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் வரும் 01.02.2024 முதல் 14.02.2024 வரை “இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” நடைப்பெறுகிறது.

01/02/2024 14/02/2024 பார்க்க (39 KB)
திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர்

ஊரக வளர்ச்சி அலகு, நீலகிரி மாவட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகமண்டலம் அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு மற்றும் தகவல், கல்வி (ம) தொடர்பு குழு பிரிவுகளுக்கு ஒரு திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலர் மற்றும் இரண்டு தகவல், கல்வி மற்றும் தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் வெளிநிரவல் முறை மூலம் தேர்ந்தெடுக்க தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/01/2024 06/02/2024 பார்க்க (39 KB)
சிறந்த திருநங்கை விருது 2024

2023-2024 ஆண்டுக்கான திருநங்கையர்கள் இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில் , மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15ம் தேதியன்று திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ.1,00,000 காசோலை மற்றும் சான்று வழங்கப்படுகிறது.

தகுதியான திருநங்கையர்கள் தமிழ்நாடு அரசின் விருதுகள் ((https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தின் வாயிலாக 26.12.2023 முதல் 31.01.2024 வரை விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

26/12/2023 31/01/2024 பார்க்க (22 KB)