• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026

பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு “சுபாஷ் சந்திரபோஸ் அப்த பிரபந்தன் புரஸ்கார்” என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

21/05/2025 30/09/2025 பார்க்க (49 KB)
தாவணெ மற்றும் சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் – ஒப்பந்தப்புள்ளி

தாவணெ மற்றும் சுள்ளிக்கூடு முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை 3 ஆண்டுகள் காலத்திற்கு வாடகைக்கு ஒதுக்கீடு செய்வதற்கு மூடி முத்திரையிடப்பட்ட உறையில் ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன.

17/09/2025 29/09/2025 பார்க்க (4 MB)
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.09.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

19/09/2025 29/09/2025 பார்க்க (367 KB)
நீலகிரி மாவட்டம், பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு

தகுதியுள்ள நிறுவனங்களிடம் இருந்து, நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், பழங்குடி அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்புக்கு விலைப்பட்டியல் அழைப்பு விடுக்கப்படுகிறது

12/09/2025 21/09/2025 பார்க்க (167 KB)
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்

இந்திய தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு(BLO), வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்கள்(BLO Kit) வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான உபகரணங்களில்  பை, பதிவு புத்தகம், எழுத்துப்பொருட்கள், தொப்பி மற்றும் திருத்தம் செயல்பாட்டின் போது தேவையான பிற பொருட்கள் அடங்கலாம்.

ஆர்வமுள்ள வழங்குனர்கள் தங்கள் ஒப்பந்த்த்தப்புள்ளியை  deo_nilgiris@yahoo.co.in மற்றும் deo-tnnlg@eci.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு  அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10/09/2025 17/09/2025 பார்க்க (699 KB)
மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், எமரால்டு பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் அமைக்க உத்தேசம் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி மனநல காப்பகத்தினை நடத்திட தகுதியின் அடிப்படையில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/08/2025 30/08/2025 பார்க்க (279 KB)
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 18.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

06/08/2025 18/08/2025 பார்க்க (522 KB)
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

25/07/2025 05/08/2025 பார்க்க (384 KB)
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 02.08.2025 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையம், கார்டன் ரோடு உதகையில் நடைபெறவுள்ளது.

02/08/2025 02/08/2025 பார்க்க (38 KB)
ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு பணியாளர்களை  ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/07/2025 31/07/2025 பார்க்க (54 KB)