செ.வெ.எண்:690- நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கூடலூர் பகுதியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் வாக்காளர்களிடையே கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான செயல்முறை அரங்கம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. (PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:689- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 14.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/11/2025நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் வரும் 14.11.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் உதகை RCTC (பழங்குடியினர் பண்பாட்டு மையம்) கார்டன் சாலை, ஊட்டி, கீழ்தள கூட்ட அரங்கில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:688- “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு 6000/- ரூபாய் மூன்று தவணைகளில், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.(PDF 58KB)
மேலும் பலசெ.வெ.எண்:687- ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம் 2024-25 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் படைப்புகளை தெரிவு செய்து அவர்களுக்கு தலா.ரூ.1,00,000/- ஆக நிதி உதவியினை உயர்த்தி வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.(PDF 62KB)
மேலும் பலசெ.வெ.எண்:686- திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் 2025-2026-ஆம் ஆண்டிற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:685- நீலகிரி மாவட்டத்தில் வேளாண் மதிப்பு கூட்டு மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வேளாண் விளைப் பொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக மதிப்புக் கூட்டு மையங்கள் அமைக்க நீலகிரி மாவட்டத்திற்கு ரூ 1 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது.(PDF 64KB)
மேலும் பலசெ.வெ.எண்:684- “தொல்குடித் தொடுவானம்” திட்டத்தின் கீழ் பழங்குடியின இளைஞர்களுக்கான திறன் பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 07/11/2025தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து, பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை உறுதிசெய்யும் வகையில் சிறப்புதிறன் மேம்பாட்டு மற்றும் வேலைவாய்ப்புப்பயிற்சி முகாமை நவம்பர் 8 சேலத்தில் நடத்தவுள்ளது. அரசின் முக்கியத்திட்டமான “தொல்குடித்தொடுவானம்” திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அரிய முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.(PDF 264KB)
மேலும் பலசெ.வெ.எண்:683- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் இதர துறைகளின் பல்வேறு பணிகள் குறித்தும், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:682- இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் PM-YASASVI-Top Class Education in Schools for OBC, EBC & DNT Students கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை (National Scholarship Portal) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.(PDF 67KB)
மேலும் பலசெ.வெ.எண்:681- பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்- நவம்பர்-2025
வெளியிடப்பட்ட நாள்: 06/11/2025பிரதம மந்திரி தேசியத்தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் 10 – நவம்பர் -2025 தேசியத்தொழில் பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் தொழில் பழகுநர்க்கான பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 10.11.2025 அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை) நடைபெற உள்ளது.(PDF 49KB)
மேலும் பல
