செ.வெ.எண்:410- நீலகிரி மாவட்டத்தில் செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை-III) ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள செவிலியர் மற்றும் ஆய்வக நுட்புநர் (நிலை-III) – ஒப்பந்த அடிப்படையில் – நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு(PDF 61KB)
மேலும் பலசெ.வெ.எண்:409- பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays/Lodges/Resorts குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்திற்கு தெரிவிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 25/07/2025மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற உத்திரவிற்கிணங்க, நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays / Lodges / Resorts ஆகியவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலர், நகராட்சி ஆணையாளர், மாவட்ட சுற்றுலா அலுவலர் மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பொதுமக்கள் நீலகிரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் Cottages/Home Stays/Lodges/Resorts குறித்த புகார்களை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள […]
மேலும் பலசெ.வெ.எண்:408- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி ஊராட்சியில் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் , நெடுகுளா, கோடநாடு ஊராட்சி பகுதிகளில் ரூ.1.77 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மற்றும் நடைபெற்று முடிந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:407- நீலகிரி மாவட்டத்தில் “நான் முதல்வன்” பயிற்சியானது “இயற்கை சாகுபடியாளர்” எனும் தலைப்பில் தொடங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025நீலகிரி மாவட்டத்தில் “நான் முதல்வன்” (Finishing School Scheme) பயிற்சியானது (Organic cultivator) “இயற்கை சாகுபடியாளர்” எனும் தலைப்பில் வருகின்ற ஜுலை28ம் தேதி ரோஸ்கார்டனில் அமைந்துள்ள தோட்டக்கலை பயிற்சிமையம் அரங்கத்தில் தொடங்கப்படவுள்ளது.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:406- அரசு தலைமை கொறாடா அவர்கள் கோத்தகிரி நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/2025நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி காந்தி மைதானத்தில்; நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, அரசு தலைமை கொறாடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:405- நீலகிரி மாவட்டத்தில் 25.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 24/07/202525.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: கோத்தகிரி வட்டம் குஞ்சப்பனை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் அரவேணு சிவஹரி மஹாலில் நடைபெறவுள்ளது.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:404- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 23/07/2025நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:403- நீலகிரி மாவட்டத்தில் 24.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 23/07/202524.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 9, 10 மற்றும் 11-ற்கான முகாம் பெட்போர்டு, பாரதியார் மண்டபத்திலும், கோத்தகிரி நகராட்சிக்குட்ப்பட்ட வார்டு 20 மற்றும் 21-ற்கான முகாம் நிவாரணமையம், காந்தி மைதானத்திலும், குன்னூர் வட்டம், எடப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் இளித்தொரை சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டம், கோடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் சுண்டட்டி சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:402- ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:401- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், நஞ்சநாடு ஊராட்சிக்குட்பட்ட குந்தக்கோடுமந்து பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதம மந்திரி ஜென்மன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.2.68 கோடி மதிப்பில் (தலா ரூ.5.70 இலட்சம்) வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 39KB)
மேலும் பல