செ.வெ.எண்:175- மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் & நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.04.2025 அன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், ஆகியோர் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 26KB)
மேலும் பலசெ.வெ.எண்:174- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 1,703 முடிவுற்ற திட்டப்பணிகளை ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்கள்.(PDF 19KB)
மேலும் பலசெ.வெ.எண்:173- நில உடைமை விவரங்கள் பதிவு செய்ய ஏப்ரல் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2025நீலகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தங்கள் கிராமத்தில் உள்ள உதவி தோட்டக்கலை அலுவலர்கள்இ உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:172- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் 2025-ம் மாதத்தில் 25.04.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:171- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வருவதை குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா வாகனங்கள் இ-பாஸ் பெற்று வருவதையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் கல்லார் தூரி பாலம் மற்றும் குஞ்சப்பணை ஆகிய சோதனை சாவடிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 207KB)
மேலும் பலசெ.வெ.எண்:169- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் பெண் உள்நோயாளிகளின் வார்டு பிரிவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட பெண் உள்நோயாளிகளின் வார்டு பிரிவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்தார்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:168- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்வரும் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்;, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:167- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அதிகரட்டி பேரூராட்சியில் புதிய நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், அதிகரட்டி பேரூராட்சி பகுதியில்,புதிய நடமாடும் நியாய விலைக்கடையினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:166- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் “ஆவின் புட்டீஸ்” என்னும் புதிய உணவு வளாகத்தை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில், ‘ஆவின் புட்டீஸ்“ என்னும் புதிய உணவு வளாகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:165- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதால், விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், ஆகியோர் மாவட்ட […]
மேலும் பல