செ.வெ.எண்:28- வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.குல்தீப் நாராயண் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026 தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:27- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் மற்றும் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, சிறப்பு தீவிரத்திருத்தம், 2026 – ஆனது கடந்த 04.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் (80+) மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய, எதிர்வரும் 10.01.2026 (சனிக்கிழமை), 11.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12.01.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் சிறப்பு […]
மேலும் பலசெ.வெ.எண்:26- சமூகநீதி கல்லூரி விடுதிககளுக்கு Professional Outsourcing Agency மூலம் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கீழ் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு, தூய்மைப்பணியாளர் பணியிடங்களை தொழில் அனுபவம் மிக்க Professional Outsourcing Agency மூலம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.(PDF 70KB)
மேலும் பலசெ.வெ.எண்:25- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் இன்று (09.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், உங்க கனவ சொல்லுங்க படிவம் மற்றும் கனவு அட்டைகளை தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:24- முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘ இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்–மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 22.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘ இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயது வரையிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு […]
மேலும் பலசெ.வெ.எண்:23- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையம் (District Hub for Empowerment of Women)-ற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு பணியாளரை தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 58KB)
மேலும் பலசெ.வெ.எண்:22- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், தலைமையில் நடைபெற்றது.(PDF 217KB)
மேலும் பலசெ.வெ.எண்:21- குறள்வார விழாவில் பொதுமக்களுக்கான குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் குறள் சார்ந்த ஓவியப் போட்டி மற்றும் குறள் ஒப்பித்தல் போட்டிகள் 13.01.2026 அன்று காலை 10.30 மணியளவில் உதகை, சி.எஸ்.ஐ. (சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் தனித்தனியே நடைபெறவுள்ளது. பொதுமக்களுக்கான இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொள்ள இயலாது.(PDF 256KB)
மேலும் பலசெ.வெ.எண்:20- கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மூலம் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (DLFP) தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது.(PDF 494KB)
மேலும் பலசெ.வெ.எண்:19- அரசு தலைமை கொறடா அவர்கள் உதகை அமுதம் நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026நீலகிரி மாவட்டத்தில், உதகை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அமுதம் நியாய விலைக்கடையில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், ரொக்கத்தொகை தலா ரூ.3,000/- மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.(PDF 51KB)
மேலும் பல
