செ.வெ.எண்:63- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் பிப்ரவரி 2026 மாதத்திற்கு 02.02.2026 மற்றும் 03.02.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 29KB)
மேலும் பலசெ.வெ.எண்:62- முன்னாள் படை வீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் – 03.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 03.02.2026 (செவ்வாய் கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:61- நீலகிரி மாவட்டத்தில் வடலூர் இராமலிங்கனார் நினைவு (01.02.2026) தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் வடலூர் இராமலிங்கனார் நினைவு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 37KB)
மேலும் பலசெ.வெ.எண்:60- கால்நடை வளர்ப்புத்துறையின் செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 29/01/2026கால்நடை வளர்ப்புத்துறையின் செய்தி வெளியீடு.(PDF 39KB)
மேலும் பலசெ.வெ.எண்:59- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆவின் வளாகத்தில் புதிதாக தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2026நீலகிரி மாவட்டத்தில், ஆவின் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள பாலாடைக்கட்டி மற்றும் சாக்லேட் தொழிற்சாலை ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)
மேலும் பலசெ.வெ.எண்:58- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உபதலை ஊராட்சியில் வளம் மீட்பு பூங்கா மையத்தினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வளம் மீட்பு பூங்கா மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:57- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மைக்ரோலேண்ட் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில், மைக்ரோலேண்ட் அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:56- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2026நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:55- 77-வது குடியரசு தினவிழா
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2026நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 77-வது குடியரசு தினவிழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 26 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:54- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 16-வது தேசிய வாக்காளர் தினத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 25/01/2026நீலகிரி மாவட்டத்தில், 16-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கி பாராட்டினார்.(PDF 123KB)
மேலும் பல