மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:91- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பயனாளிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாக்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா இணைய பட்டா வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், 440 பயனாளிகளுக்கு நத்தம் இணையவழி பட்டாக்களை வழங்கினார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:90- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஓய்வு பெற்ற டான்டீ தோட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய தொகையினை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 13/02/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர்; தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற டான்டீ தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், ரூ.35.42 கோடி மதிப்பில் பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய தொகையினை வழங்கினார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:89- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிமற்றம் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு (Multiple Skill Training and Placement Program)  பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 41KB)

மேலும் பல

செ.வெ.எண்:88- நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்களுடனான சுற்றுலா வளர்ச்சிக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)

மேலும் பல

செ.வெ.எண்:87- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பு நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 12/02/2026

எதிர்வரும் சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தேர்தல் பணியாற்றும் மண்டல அலுவலர்கள் மற்றும் காவல் அலுவலர்களுக்கான முதல் நிலை பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 43KB)

மேலும் பல

செ.வெ.எண்:86- வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.மகாபீர்பிரசாத் I.R.A.S., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்; சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 58KB)

மேலும் பல

செ.வெ.எண்:85- நீலகிரி மாவட்டத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற விருப்பமுள்ள தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை 16.02.2026 மாலை 5.00 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ உரிய சான்றிதழ்களுடன் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். விண்ணப்பங்கள்அனுப்ப வேண்டிய முகவரி: திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), 1பி பிளாக், கூடுதல் […]

மேலும் பல

செ.வெ.எண்:84- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/02/2026

நீலகிரி மாவட்டம் உதகை அரசு ரோஜா பூங்காவில், கோடை பருவகாலத்தை முன்னிட்டு, ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:83- மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் வளம் மீட்பு பூங்கா மையங்களை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளில்; உள்ள வளம் மீட்பு பூங்கா மையங்களில், திடக்கழிவு மேலாண்மை செயல்பாடுகளை, மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:82- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 09.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/02/2026

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 201 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 47KB)  

மேலும் பல