செ.வெ.எண்:767- அரசு தலைமை கொறடா அவர்கள் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 18/12/2025நீலகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்; நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 47KB)
மேலும் பலதேசிய மின் சிக்கன வார விழாவினையொட்டி விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 17/12/2025நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் மற்றும் மத்திய திறனூக்க செயலகம் இணைந்து நடத்தும், தேசிய மின் சிக்கன வார விழா –வினையொட்டி, சிக்கனமாக மின்சாரம் பயன்படுத்துவது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:766- மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 20.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 20.12.2025 அன்று உதகை, அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது. (PDF 215KB)
மேலும் பலசெ.வெ.எண்:765- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் சாலை மற்றும் நூலகங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2025நீலகிரி மாவட்டம் எப்பநாடு ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பிரதான் மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.34 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலையினையும், தும்மனட்டி, கக்குச்சி ஊராட்சிப்பகுதிகளில் பொது நூலகங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.44 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நூலகங்களையும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், அரசு தலைமைச்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:763- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 15.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/12/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 166 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 43KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் வங்கிக்கடன் வழிக்காட்டுதல் முகாமில் கலந்துக் கொள்ள அழைப்பு
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025சுய தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் 18.12.2025 அன்று நடைபெறும் வங்கிக்கடன் வழிக்காட்டுதல் முகாமில் கலந்துக் கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் திரு லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அழைப்பு.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:762- அரசு தலைமைக்கொறடா அவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (12.12.2025) “வெல்லும் தமிழ் பெண்கள்” மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (இரண்டாம் கட்டம்) விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம், கிரேஸ்ஹில் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 3,402 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்.(PDF 57KB)
மேலும் பலசெ.வெ.எண்:761- மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்ப்பு பணி தொடங்கப்பட்டன
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூடுதல் வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் இன்று (டிசம்பர் 11, 2025) காலை 09.30 மணிக்கு முதல் நிலை சரிபார்ப்பு (First Level Checking) பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டு, Control Unit – 1096, Ballot Unit – 1717 மற்றும் VVPATs – 1120 ஆகிய எண்ணிக்கையிலான மின்னணு […]
மேலும் பலசெ.வெ.எண்:760- குடியரசு தினத்தன்று “கபீர் புரஸ்கார் விருது-2026” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025குடியரசு தினத்தன்று “கபீர் புரஸ்கார் விருது-2026” வழங்க விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பித்திடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:759- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இத்தலார் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/12/2025நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், இத்தலார் ஊராட்சி அப்புக்கோடு பகுதியில், ரூ.34.80 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.1.68 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 45KB)
மேலும் பல
