• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
02

செ.வெ.எண்:390- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அவர்கள் தலைமையில் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் திரு.எஸ்.காந்திராஜன் (வேடச்சந்தூர்) அவர்கள், தலைமையில் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 122KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:389- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் செப்டம்பர் 17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாத்தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 29.07.2025, 30-07-2025 ஆகிய நாள்களில் உதகை, சி.எஸ்.ஐ.(சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.(PDF 59KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:388- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை ஆய்வு மேற்கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 18/07/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் / திரு.எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர்) அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:387- மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க 31.07.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினர்களாக நியமனம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது. அதற்காக மாற்றுத்திறனாளிடமிருந்து விண்ணப்பங்கள் 17.07.2025-க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெற 31.07.2025 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி நியமன உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 30KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:386- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி நகராட்சி மற்றும் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி மற்றும் கோத்தகிரி ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் இம்முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.(PDF 307KB)

மேலும் பல

செ.வெ.எண்:385- நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கைப் பெறாத மாணவர்களுக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

நீலகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 24KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:384- நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட் மானியத்தில் வழங்கும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட் தற்போது மானியத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்டு வருகிறது. டீசல் இன்ஜின் மூலம் நீர் இறைக்கும் விவசாயிகளுக்கு செலவுகளைக் குறைக்கும் பொருட்டு விவசாயியின் வேளாண் நிலங்களில் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய 5,7.5 மற்றும் 10 என்ற அளவில் குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் மானியத்தில் அமைத்துத்தரப்பட்டு வருகிறது. 2025-2026-ஆம் நிதியாண்டிற்கு உத்தேச இலக்கு 50 எண்கள் நீலகிரி மாவட்டத்திற்கு  ஒதுக்கப்பட்டுள்ளது.(PDF 119KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:383- நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் நலவிடுதிகளில் மாணாக்கர் சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 13 ஆதிதிராவிடர் நலபள்ளி விடுதிகள் மற்றும் 3 ஆதிதிராவிடர் நலகல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கு விடுதியில் மாணவர் /மாணவியர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. இவ்விடுதியில் தங்கி பயில மாணவர் /மாணவியர்கள் தங்கள் விண்ணப்பங்களை https://nallosai.tn.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.(PDF 44KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:382- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேத்தி பேரூராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அச்சனக்கல் சமுதாய கூடத்தில்; நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்குமாறு அறிவுறுத்தினார்.(PDF 316KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:381- நீலகிரி மாவட்டத்தில் 18.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2025

18.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: குன்னூர் வட்டம், மேலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் தூதூர்மட்டம் சமுதாய கூடத்திலும், கோத்தகிரி வட்டம், கொணவக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கொட்டகம்பை சிவஹரிமஹாலில் நடைபெறவுள்ளது. (PDF 215KB)  

மேலும் பல