மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:668- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின்; “தாயுமானவர் திட்டத்தின்” மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர்  மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருட்கள் நவம்பர் 2025 மாதத்திற்கு 03.11.2025 மற்றும் 04.11.2025 ஆகிய நாட்களில் வழங்கப்படும்.  இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா                    தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 33KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:667- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 01/11/2025

நீலகிரி மாவட்டத்தில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 40KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:666- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ரோஜா தோட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

நீலகிரி மாவட்டத்தில், மகளிர் திட்டம் சார்பில், தோடர் பழங்குடியினர் இனத்தை சார்ந்த ரோஜா தோட்டம் மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானிய உணவகத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 34KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:665- வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 31/10/2025

வடகிழக்கு பருவமழை இவ்வாண்டு தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் தோட்டக்கலை பயிர்களை கனமழையிலிருந்தும் காற்றிலிருந்தும் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். எனவே விவசாயிகள் குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி மழை மற்றும் காற்றினால் பயிர் சேதம் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 42KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:664- நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு அரசு வாகனம் கழிவு நீக்கம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

நீலகிரி மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்து வந்த ஈப்பு அரசு வாகனம் எண் TN 43 G 0402 பதினைந்து வருடங்கள் கடந்த நிலையில் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை தொழில் நுட்ப உதவியாளர் இ அரசு தானியங்கி பணிமனை உதகமண்டலம் அவர்களின்செயல்முறை ஆணை எண் அ1- 134 -2025 நாள் 12-05-2025 ன்படி மேற்படி வாகனம் முதிர்ந்த நிலையில் (Normal Condemnation) செய்யப்பட்டு          […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:663- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

நீலகிரி மாவட்டத்தில் நவம்பர்-2025 மாதத்தில் 21.11.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 35KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:662- குன்னூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 01.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/10/2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” 8-வது முகாமானது 01.11.2025 சனிக்கிழமை அன்று குன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட சேலாஸ் பகுதியில் உள்ள சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 48KB)  

மேலும் பல

செ.வெ.எண்:661- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 29/10/2025

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 35KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:660- “நீலகிரி மாவட்ட 4வது புத்தகத் திருவிழா”வின் ஐந்தாவது நாள் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் ஐந்தாவது நாளான 4வது புத்தகத் திருவிழா நிகழ்ச்சியில், வழக்கறிஞர் திரு.கே. விஜயன் அவர்கள் ‘கற்றது கை மண்ணளவு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.(PDF 41KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:659- உள்ளாட்சிகள் தினமான 01.11.2025 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 28/10/2025

உள்ளாட்சிகள் தினமான 01.11.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 30KB)

மேலும் பல