மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:243- முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் சார்பாளர்களுக்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு – 21.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் சார்பாளர்கள் 2026–27 கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கைகளில் சிறப்பு இடஒதுக்கீட்டை பெறுவதற்காக சார்பாளர் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம். (PDF 50KB )

மேலும் பல

செ.வெ.எண்:242- குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி வருகின்ற 22.05.2026(வெள்ளிக்கிழமை) துவங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி 22.05.2026 முதல் 24.05.2026 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மலைப்பயிர்கள் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 40KB )

மேலும் பல

செ.வெ.எண்.241- நீலகிரி மாவட்டம் இடைநிலைபொதுத்தேர்வு (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் மார்ச்/ஏப்ரல் 2026

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

நீலகிரி மாவட்டம் இடைநிலைபொதுத்தேர்வு (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் மார்ச்/ஏப்ரல் 2026 (PDF 40KB )

மேலும் பல

செ.வெ.எண்:240- உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு (PDF 41KB )

மேலும் பல

செ.வெ.எண்:239- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது.(PDF KB )

மேலும் பல

செ.வெ.எண்:238- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

நீலகிரி மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.(PDF 42KB )    

மேலும் பல

செ.வெ.எண்.237- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாவரவியல் பூங்காவில் 128வது மலர்க்காட்சியை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 128வது மலர்க்காட்சியை இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 208KB )

மேலும் பல

செ.வெ.எண்.236- மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க அரசு பள்ளி மாணவர்களுக்கான குடியிருப்பு கோடை முகாம் நிறைவு விழா

வெளியிடப்பட்ட நாள்: 16/05/2026

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கான, குடியிருப்பு கோடை முகாம் 27.04.2026 முதல் 16.5.2026 அன்று வரை நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (16.05.2026) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.(PDF 192KB )

மேலும் பல

செ.வெ.எண்.235- உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 முதல் 28.05.2026 வரை நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026

உலக புகழ்பெற்ற மலர்க்காட்சி உதகை தாவரவியல் பூங்காவில் 18.05.2026 அன்று துவங்கப்படவுள்ளது. இக்காட்சி 18.05.2026 முதல் 28.05.2026 வரை நடைபெறவுள்ளது. இவ்வருடம் தோட்டக்கலை துறையினரால் மிக விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்(PDF 43KB)

மேலும் பல

செ.வெ.எண்:234- நீலகிரி மாவட்டத்தில் 128-வது மலர்க்கண்காட்சியினை முன்னிட்டு, 18.05.2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 15/05/2026

 நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் 18.05.2026  (திங்கள்கிழமை) அன்று 128-வது மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளதால், மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட 18.05.2026  விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 06.06.2026 (சனிக்கிழமை) அன்று இம்மாவட்டத்திற்;கு பணி நாளாக இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது.  என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி […]

மேலும் பல