செ.வெ.எண்:33- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிதியுதவியுடன், அங்கக வேளாண்மை (ம) பயிர் உற்பத்தி சான்று வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி சான்றிதழ் மற்றும் ரூ.1.49 இலட்சம் மதிப்பில் நிதியுதவிகளை வழங்கினார்.(PDF 57KB)
மேலும் பலசெ.வெ.எண்:32- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 135 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:31- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை நகராட்சிக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2026நீலகிரி மாவட்டத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் நடைபெற்ற விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், நகர்ப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், 26 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பினை, உதகை நகராட்சிக்குட்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களிடம் வழங்கினார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:30- திருநங்கையர் தினவிருது -2026
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு திருநங்கையர் தினவிருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். எனவே தகுதியான நபர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக 18.02.2026-க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 57KB)
மேலும் பலசெ.வெ.எண்:29- பொங்கல் கலை விழா – 2026
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி மற்றும் மசினகுடி இடத்தில் 15.01.2026 மற்றும் 16.01.2026 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொங்கல் கலைவிழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.(PDF 48KB)
மேலும் பலசெ.வெ.எண்:28- வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் திரு.குல்தீப் நாராயண் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) – 2026 தொடர்பாக, வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:27- நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் சிறப்பு முகாம்கள் மற்றும் கையெழுத்துப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 10/01/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, சிறப்பு தீவிரத்திருத்தம், 2026 – ஆனது கடந்த 04.11.2025 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் (80+) மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்ய, எதிர்வரும் 10.01.2026 (சனிக்கிழமை), 11.01.2026 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12.01.2026 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் மாவட்ட சமூக நலத்துறை மூலம் சிறப்பு […]
மேலும் பலசெ.வெ.எண்:26- சமூகநீதி கல்லூரி விடுதிககளுக்கு Professional Outsourcing Agency மூலம் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கீழ் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு, தூய்மைப்பணியாளர் பணியிடங்களை தொழில் அனுபவம் மிக்க Professional Outsourcing Agency மூலம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.(PDF 70KB)
மேலும் பலசெ.வெ.எண்:25- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி பாடியநல்லூரில் இன்று (09.01.2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், உங்க கனவ சொல்லுங்க படிவம் மற்றும் கனவு அட்டைகளை தன்னார்வலர்களுக்கு வழங்கினார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:24- முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘ இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்–மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 22.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘ இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயது வரையிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு […]
மேலும் பல