மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:13- நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மை விரிவாக்க ஊக்குவிப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க சிறப்புத் திட்டத்தினை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தும் வகையில் 50 கோடிநிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்த 2023-24ம் நிதி ஆண்டில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.(PDF 45KB)

மேலும் பல

செ.வெ.எண்:12- தைப்பொங்கல்-2026 திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

2026 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைத் தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்: 1 கிலோ பச்சரிசி 1 கிலோ சர்க்கரை ஒரு முழுக்கரும்பு வேட்டி சேலை, ரொக்கத்தொகை ரூ.3,000/- வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதி வாய்ந்த 2,18,576 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் […]

மேலும் பல

செ.வெ.எண்:11- அரசு தலைமைக்கொறடா அவர்கள் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில், நடைபெற்ற “உலகம் உங்கள் கையில்” எனும் நிகழ்ச்சியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், 1,994 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.(PDF 50KB)    

மேலும் பல

செ.வெ.எண்:10- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

நீலகிரி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) /மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், துறை ரீதியான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:09- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 05.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 115 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:08- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2026

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; நேரில் பார்வையிட்டார்.(PDF 110KB)

மேலும் பல

செ.வெ.எண்:07- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/01/2026

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பொருளான முழு நீள கரும்பின் தரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 98KB)

மேலும் பல

செ.வெ.எண்:06- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/01/2026

நீலகிரி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டார்.(PDF 110KB)

மேலும் பல

செ.வெ.எண்:05- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோத்தகிரி வட்டத்தில் சீரமைக்கப்பட்ட சமுதாய கூடத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ஜக்கனாரை ஊராட்சி பனகுடி கிராமத்தில் டி.வி.எஸ் ஸ்ரீனிவாசா சேவைகள் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் சார்பில், ரூ.8.21 இலட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட சமுதாய கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 44KB)

மேலும் பல

செ.வெ.எண்:04- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் 27 கிராம ஊராட்சிகளை பிரித்து 88 கிராம ஊராட்சிகளாகவும் மீதமுள்ள 8 கிராம ஊராட்சிகள் பிரிக்கப்படாமல் மொத்தம் 96 கிராம ஊராட்சிகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 46KB)

மேலும் பல