• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:369- வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் முன் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரை வெளியிடப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடி செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு வெளிநாட்டு வேலை தொடர்பான சந்தேகங்களுக்கு மற்றும் வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கான அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் 24 / 7 கட்டணமில்லா உதவி மையத்தினை தொடர்பு கொள்ளவும். • இந்தியாவிலிருந்து அழைப்புக்கு : 1800309 3793 • வெளிநாடுகளிலிருந்து : 08069009900 (Missed Call) 08069009901 • […]

மேலும் பல

செ.வெ.எண்:368- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில்,“உங்களுடன் ஸ்டாலின்”என்ற திட்டம் துவக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமதி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக“உங்களுடன் ஸ்டாலின்”திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் வாரியாக 146 முகாம்களில் நடைபெறவுள்ளது என தகவல்.(PDF 60KB)  

மேலும் பல
01

செ.வெ.எண்:367- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 201 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.16,199/- மதிப்பிலான திறன் பேசிகளை வழங்கினார்.(PDF 32KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:365- நீலகிரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 12/07/2025

நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ’உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் வாரியாக நடைபெறவுள்ளது.(PDF 57KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:364- மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக உலக வங்கி நிதியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025

நீலகிரி மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து அவர்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நகர்ப்புற மற்றும் ஊராகப் பகுதிகளில் முன்களப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது.(PDF 44KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:363- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025

நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை (குடும்ப நல செயலகம்) சார்பில், உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு, செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 36KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:361- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய் 1 கோடி வழங்கப்படும்.(PDF 68KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:359- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு 23.07.2025 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025

நீலகிரி மாவட்டத்தில் ஜுலை 2025-ம் மாதத்தில் 18.07.2025 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணத்தை முன்னிட்டு 23.07.2025 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 40KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:358- கோத்தகிரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணி

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல